தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

எதிர்க்கட்சிகளை குறி வைக்க பிரதமர் மோடி சட்டங்களை ஆயுதமாக பயன்படுத்துகிறார்: கபில் சிபல் தாக்கு

புதுடெல்லி: குற்ற வழக்கில் கைதாகி 30 நாள்கள் சிறை சென்றாலே பிரதமர், மாநில முதல்வர்கள், அமைச்சர்களை பதவி நீக்கம் செய்ய வழிவகுக்கும் அரசிலமைப்பு சட்ட திருத்த மசோதாவை ஒன்றிய பாஜ அரசு கடந்த 20ம் தேதி மக்களவையில் தாக்கல் செய்தது.

Advertisement

இந்த மசோதா குறித்து மாநிலங்களவை உறுப்பினர் கபில் சிபல் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய கபில் சிபல், “பீகாரில் பாஜவுக்கு எதிரான அலை திரும்பி இருப்பதை பாஜ உணர்ந்துள்ளதாலும், மக்கள் பிரச்னைகளை திசை திருப்ப விரும்புவதாலும் இந்த மசோதாக்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

ஒன்றியத்திலும், பாஜ ஆட்சி செய்யும் மாநிலங்களிலும் எந்தவொரு அமைச்சரும் குற்ற வழக்குகளில் கைது செய்யப்படுவதில்லை. விசாரணை அமைப்புகள் எதிர்க்கட்சி தலைவர்களை மட்டுமே குறி வைத்து கைது செய்கின்றன. எதிர்க்கட்சிகளின் அரசாங்கங்களை சீர்குலைக்க சட்டங்களை ஆயுதமாக பயன்படுத்துவதே இந்த சட்ட மசோதாக்களின் நோக்கம்” என கடுமையாக சாடினார்.

 

Advertisement