தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கோவை வரும் பிரதமருக்கு எதிர்ப்பு: விவசாயிகள், மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் போராட்டத்தால் பரபரப்பு

கோவை: பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் போராட்டம் நடத்தி வருவதால் பரபரப்பு நிலவி வருகிறது. மதுரை, கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்தை ஒன்றிய அரசு நேற்று நிராகரித்தது. கோவை கொடிசியாவில் தென்னிந்திய இயற்கை வேளாண் கூட்டமைப்பு சார்பில் நடைபெறும் விவசாயிகள் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று கோவைக்கு வருகை தருகிறார். வேளாண் மாநாட்டில் பங்கேற்க கோவை வரும் பிரதமர் மோடிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் போராட்டம் நடத்தி வருவதால் பரபரப்பு நிலவி வருகிறது.

Advertisement

இந்த ஆர்ப்பாட்டத்தில் கோவைக்கு பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு துரோகம் செய்துவிட்டது. கோவையின் வளர்ச்சியை தடை செய்துவிட்டு கோவையில் மோடிக்கு என்ன வேலை? கோவை மெட்ரோ ரயில் திட்டத்தை முடக்காதே என்றும், உடனடியாக அனுமதி தர வேண்டும் என்று போராட்டக்காரர்கள் முழக்கம் எழுப்பினர்.

அதேபோல வேளாண் மாநாட்டை புறக்கணித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் விவசாயிகள் கருப்புக் கொடி ஏந்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். இயற்கை வேளாண்மைக்கு முற்றிலும் எதிரான மரபணு மாற்றப்பட்ட நெல் விதிகளை இறக்குமதி செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இயற்கை விவசாயத்துக்கு மானியம் இல்லை. மரபணு விதைகளை இறக்குமதி செய்ய டெல்லியில் ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்துவிட்டு வேளாண் மாநாடு நடத்துவதற்கு விவசாயிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Related News