தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மயிலாடும்பாறை அருகே விவசாய நிலங்களை அளவீடு செய்ய எதிர்ப்பு

Advertisement

வருசநாடு : மயிலாடும்பாறை அருகே விவசாய நிலங்களை அளவீடு செய்ய எதிர்ப்பு தெரிவித்து வனத்துறையினருடன் கிராம மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.ஆண்டிபட்டி தாலுகா, மயிலாடும்பாறை அருகே உள்ள தாழையூத்து கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தை சேர்ந்த மக்கள் அப்பகுதியில் உள்ள நிலங்களில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக விவசாயம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் தேனி மாவட்டத்தில் உள்ள வனச்சரகங்களை இணைத்து ஒருங்கிணைந்த மேகமலை புலிகள் காப்பகமாக மாற்றி அரசு உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து வனச்சட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், கண்டமனூர் பகுதியில், விளைநிலங்களுக்கு சென்று நிலங்களை அளவீடு செய்யும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர்.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் வனத்துறையினருக்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த கடமலைக்குண்டு போலீசார், கிராம நிர்வாக அலுவலர் அன்பழகன், கண்டமனூர் வனச்சரகர் சிவாஜி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பிச்சைக்கனி இளையராஜா உள்ளிட்டோர் அங்கு வந்து பொதுமக்களிடம் பேச்சு நடத்தினர். இதையடுத்து கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Advertisement

Related News