எதிர்க்கட்சிகள் முழக்கத்தால் நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு..!!
01:00 PM Aug 08, 2025 IST
டெல்லி: எதிர்க்கட்சிகள் முழக்கத்தால் மக்களவை பிற்பகல் 3 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பீகார் வாக்காளர் பட்டியல், தேர்தல் முறைகேட்டுக்கு எதிராகவும், பீகார் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து விவாதிக்கக் கோரியும் மக்களவையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முழக்கமிட்டனர். இதையடுத்து எதிர்க்கட்சிகள் முழக்கத்தால் மாநிலங்களவை திங்கட்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.