தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாக். கெஞ்சியதால் போரை நிறுத்தினோம்: ஐநாவில் இந்தியா வலுவான பதிலடி

ஐக்கிய நாடுகள்: ஐநா பொதுக்கூட்டத்தில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பேச்சுக்கு பதிலளித்த இந்திய தூதர், ‘‘தீவிரவாதம் தான் பாகிஸ்தான் வெளியுறவுக் கொள்கையின் மையம்’’ என்றும், ‘‘பாகிஸ்தான் கெஞ்சியதால்தான் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை நிறுத்தப்பட்டது’’ என்றும் சரமாரி பதிலடி கொடுத்தார். ஐநா பொதுச்சபையின் 80வது கூட்டம் நியூயார்க்கில் உள்ள ஐநா தலைமையகத்தில் நடந்து வருகிறது. இதில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், கடந்த மே மாதம் ஆபரேஷன் சிந்தூரின் போது இந்தியாவின் 7 போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாகவும், இந்தியாவுக்கு எதிரான போரில் பாகிஸ்தான் வென்றதாகவும், டிரம்ப் தலையிட்டதால் தான் பேரழிவு தவிர்க்கப்பட்டதாகவும், தீர்க்கப்படாத பிரச்னைகள் குறித்து பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாகவும் கூறினார்.

Advertisement

இதற்கு பதிலடி தரும் வகையில், ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தர தூதர் பெட்டல் கெலாட் ஐநா கூட்டத்தில் நேற்று பேசியதாவது: இந்த சபை பாகிஸ்தான் பிரதமரின் அபத்தமான நாடகங்களை கண்டது. அவர் மீண்டும் ஒருமுறை தங்கள் வெளியுறவுக் கொள்கையின் மையமாக இருக்கும் தீவிரவாதத்தை மகிமைப்படுத்தி உள்ளார். எந்தவொரு நாடகத்தாலும், பொய்களாலும் உண்மையை மறைக்க முடியாது. கடந்த ஏப்ரல் 22ம் தேதி காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலா பயணிகளை காட்டுமிராண்டித்தனமாக படுகொலை செய்த சம்பவத்திற்கு தீவிரவாத அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் ப்ரண்ட் பொறுப்பேற்றுள்ளது. இந்த அமைப்பை ஆதரித்து பாதுகாத்தது பாகிஸ்தான்.

தீவிரவாதத்தை நிலைநிறுத்தி, ஏற்றுமதி செய்யும் பாரம்பரியத்தில் நீண்டகாலமாக ஈடுபட்டிருக்கும் பாகிஸ்தான், தீவிரவாதத்திற்கு எதிரான போரில் பங்குதாரர் போல் நடித்து 10 ஆண்டுக்கும் மேலாக ஒசாமா பின்லேடனுக்கு அடைக்கலம் கொடுத்தது என்பதை நினைவில் கொள்வோம். ஆபரேஷன் சிந்தூரின் போது இந்திய படைகளால் பஹாவல்பூர், முரிட்கேவில் தீவிரவாத தளங்களில் பல தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்களின் இறுதிச் சடங்குகளில் பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் பங்கேற்று அஞ்சலி செலுத்திய புகைப்படங்களை இந்த உலகம் பார்த்துள்ளது.

ஆபரேஷன் சிந்தூரின் போது பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத தளங்கள் தாக்கி அழிக்கப்பட்டன. மே 9ம் தேதி வரையிலும் வலுவான பதிலடி தருவோம் என கூறி வந்த பாகிஸ்தான் ராணுவம், மே 10ம் தேதி போரை நிறுத்துமாறு கெஞ்சிக் கேட்டது. அதனால் தான் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை தற்காலிகமாக நிறுத்தினோம். எங்கள் தாக்குதலில் பாகிஸ்தானின் ராணுவ விமான ஏவுதளங்களின் ஓடுபாதைகள், ஹேங்கர்களில் ஏற்பட்ட சேதங்கள் பாகிஸ்தான் பிரதமருக்கு வெற்றியாக தோன்றினால், அதை அவர் கொண்டாடுவதை நாங்கள் வரவேற்கிறோம். பாகிஸ்தான் பேச்சுவார்த்தை மூலம் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதை உண்மையிலேயே நம்பினால், உடனடியாக அனைத்து தீவிரவாத முகாம்களையும் மூடிவிட்டு, இந்தியாவால் தேடப்படும் தீவிரவாதிகளை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

* யாரும் தலையிட இடமில்லை

இந்தியா-பாகிஸ்தான் போரை அமெரிக்க அதிபர் டிரம்ப் நிறுத்தியதாக பாகிஸ்தான் பிரதமர் கூறியதையும் இந்திய தூதர் பெட்டல் கெலாட் மறுத்தார். அவர் கூறுகையில், ‘‘பாகிஸ்தானுடனான எந்தவொரு தீர்க்கப்படாத பிரச்னையும் இருதரப்பு ரீதியாகவே தீர்க்கப்படும். இதில் எந்தவொரு மூன்றாம் தரப்புக்கும் இடமில்லை’’ என்றார்.

Advertisement

Related News