தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அசாமின் தர்ரங்காவில் இந்தியா - பூடான் முதல் ஒருங்கிணைந்த சோதனைச்சாவடி திறப்பு

Advertisement

தர்ரங்கா: இந்தியா - பூடான் எல்லையில் முதல் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடி நேற்று திறக்கப்பட்டது. அசாமின் தமுல்பூர் மாவட்டத்தில் தர்ரங்கா சோதனைச் சாவடியை ஒன்றிய அரசு அதிகாரப்பூர்வமாக ஒரு அங்கீகரிக்கப்பட்ட குடிவரவு சோதனைச் சாவடியாக நிறுவி உள்ளது. சர்வதேச எல்லைக்கு அருகிலுள்ள தர்ரங்கா சோதனைச் சாவடி வணிகம் மற்றும் பயணிகள் போக்குவரத்துக்கான முக்கிய போக்குவரத்து புள்ளியாக நீண்ட காலம் செயல்பட்டு வருகிறது. குறிப்பாக அசாம் அண்டை நாடுகளான பூடான் மற்றும் வங்கதேசத்துக்கு அருகில் அமைந்துள்ளது.

இதையடுத்து முறையான குடியேற்ற சோதனைச் சாவடியை நிறுவுவது, எல்லை பாதுகாப்புகளை வலுப்படுத்துவது, குடியேற்றங்களை ஒழுங்குபடுத்துதல் மற்றும் எல்லை தாண்டிய போக்குவரத்தின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவது போன்ற இந்தியாவின் பரந்த மூலோபாயங்களுடன் ஒத்து போகிறது. இந்நிலையில் இந்தியா - பூடான் எல்லையில் இருந்து 700 கிமீ தொலைவில் 14.5 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள தர்ரங்கா சோதனைச் சாவடியை அசாம் ஆளுநர் லஷ்மண் பிரசாத் ஆச்சார்யா, பூடான் பிரதமர் தாஷோ ஷெரிங் டோப்கே முன்னிலையில் நேற்று திறந்து வைத்தார்.

இந்த சோதனைச் சாவடியில் அலுவலக வளாகம், வாகன நிறுத்துமிடங்கள், சரக்குகள் ஏற்றுதல், இறக்குதல், எடைப்பாலம், கிடங்குகள் உள்ளிட்ட அதிநவீன வசதிகள் உள்ளடங்கி உள்ளன.

Advertisement