v
Advertisement
இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை செயலாளர் மதுமதி வெளியிட்டுள்ள அரசாணை: கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியிடப்பட்ட பள்ளிக் கல்வித்துறையின் உத்தரவு குறித்து அரசு தீவிரமாக பரிசீலித்து, அந்த உத்தரவை ரத்து செய்வதுடன் தேசிய திறந்த நிலை கல்வி நிறுவனம் மூலம் வழங்கப்படும் கல்வித் திட்டங்களில் 10 மற்றும் 12ம் வகுப்பு படித்து பெறப்பட்ட சான்றுகள், மாநில பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்படும் 10 மற்றும் 12ம் வகுப்பு சான்றுகளுக்கு நிகரானவை என்றும், பதவி உயர்வு மற்றும் பணி நியமனங்களின் போது இந்த சான்றுகள் தகுதியாக ஏற்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
Advertisement