தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

எதுவும் இப்போதைக்கு சொல்ல முடியாது யாருடன் சந்திப்பு, பேச்சு என்பது சஸ்பென்ஸ்: மனம் திறக்க மறுக்கும் செங்கோட்டையன்

கோபி: ‘‘எதுவும் இப்போதைக்கு சொல்ல முடியாது. யாருடன் சந்திப்பு, பேச்சு என்பது சஸ்பென்ஸ்’’ என்று செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார். அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒருங்கிணைக்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கெடு விதித்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் கட்சி பதவிகள் பறிக்கப்பட்டு ஓரங்கட்டி வைக்கப்பட்டுள்ளார். கடந்த 3 நாட்களுக்கு முன்பு நீலகிரி பிரசாரத்துக்கு செல்லும் வழியில் கோபியில் எடப்பாடிக்கு வரவேற்பு அளிக்க அதிமுகவினர் ஏற்பாடு செய்தனர்.

Advertisement

இந்த தகவல் கிடைத்ததும் செங்கோட்டையன் கோபியில் இருந்து ரகசியமாக வெளியேறி சென்னைக்கு சென்றுவிட்டார். அடையாறில் உள்ள டிடிவி தினகரன் வீட்டுக்கு நேற்று முன்தினம் மதியம் சென்ற செங்கோட்டையன் அவருடன் 1 மணி நேரம் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் செங்கோட்டையன் நேற்று காலை சென்னையில் இருந்து கோபிக்கு திரும்பினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: சென்னையில் சிகிச்சை பெற்று வரும் எனது மனைவியை பார்க்க சென்றேன்.

அங்கு சென்றவுடன் எனது சொந்த வேலையை பார்த்துவிட்டு வீடு திரும்பினேன். அரசியல் ரீதியாகவும், மற்ற ரீதியாகவும் நான் யாரையும் சந்திக்கவில்லை. என்னை பொறுத்தவரையில் இந்த இயக்கம் வலிமை பெற வேண்டும். அனைவரும் ஒருங்கிணைய வேண்டும் என்ற நோக்கம் மட்டும்தான் இருக்கிறது. எனது குறிக்கோள் ஒன்றுதான், அந்த குறிக்கோளின் அடிப்படையில் யாரையும் சந்திக்கவில்லை. அரசியல் ரீதியாக யாரிடத்திலும் நான் பேசவில்லை என்பதை தெளிவுபடுத்துகிறேன். நல்லது நடக்கும் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

ஒருங்கிணைப்பு பணி குறித்து நிருபர்கள் கேட்டபோது, ‘‘பல்வேறு நண்பர்கள் என்னிடத்தில் பேசுகிறார்கள். ஒருமித்த கருத்துகள் அவர்கள் மனதில் இருக்கிறது. யார் என்னிடத்தில் பேசினார்கள் என்பது சஸ்பென்ஸ். அதை தற்போது நான் கூற இயலாது. ஆகவே, எல்லோருடைய உள்ளங்களிலும் இருப்பது அதுதான். இன்று வரை நான் சொன்ன கருத்துக்களுக்கு ‘‘நெகட்டிவ் கமெண்ட்ஸ்’’ யாரிடத்தில் இருந்தும் வரவில்லை. எல்லோருடைய மனதிலும் ஒன்றிணைந்து வெற்றி பெற வேண்டும் என்ற மனநிலை இருக்கிறது. ஓபிஎஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் தொடர்பு கொண்டார்களா? என்பதை சொல்வது சரியாக இருக்காது. யார் பேசினார்கள், யார் பேசவில்லை என்பதை இப்போது சொல்வதற்கு வாய்ப்பு இல்லை’’ என்றார். ‘தேர்தலுக்கு முன் ஒருங்கிணைப்பு பணி முடியுமா?’ என்ற கேள்விக்கு, ‘‘நல்லதே நடக்கும் என்று நம்புகிறோம். இப்போதுள்ள சூழ்நிலையில் யாரையும் சந்திப்பதற்கு வாய்ப்பு இல்லை. வாய்ப்பு இருந்தால் உங்களுக்கு தெரிவிக்கிறேன்’’ என்றார்.

Advertisement