தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

ஓ.பன்னீர்செல்வத்தை கூட்டணியில் சேர்ப்பது பற்றி பின்னர் பேசலாம்: நயினார் நாகேந்திரன் மழுப்பல்

சென்னை: சென்னை தி.நகரில் பாஜ சார்பில் நேற்று சேவை வாரம் கொண்டாடப்பட்டது. இதில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்துகொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இதில் மாநில துணைத்தலைவர்கள் சக்கரவர்த்தி, வி.பி.துரைசாமி, மாவட்ட தலைவர் கிரி உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் நயினார் நாகேந்திரன் அளித்த பேட்டி:

அடுத்த மாதம் 2ம் தேதி வரை வீடு தோறும் கொடி ஏற்ற வேண்டும் என்று எல்லா மக்களிடமும் எடுத்துக்கூற இருக்கிறோம். பிரதமர் மோடி கைவினைப் பொருட்களை ஊக்குவிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அதன் அடையாளமாகவே கைவினைப் பொருட்கள் இன்று வழங்கப்பட்டுள்ளன. தூய்மை பணியாளர்களுக்கு பாத பூஜை பண்ணியவர் எங்கள் பிரதமர். பாஜவின் ஆதரவு அவர்களுக்கு எப்போதும் உண்டு.

எங்களது கட்சியின் துணைத் தலைவர்கள் நேரில் சென்று ஆதரவு அளித்திருக்கிறார்கள். பாஜ வாக்கு திருட்டு செய்திருப்பதாக கூறுகிறார்கள். ஆனால் தேர்தல் ஆணையம் என்பது ஒரு தனிப்பட்ட செயல்பாடு கொண்டதாகும். இவ்வாறு அவர் கூறினார். பாஜக கூட்டணிக்கு மீண்டும் வருமாறு ஓபிஎஸ்க்கு அழைப்பு விடுக்கப்படுமா? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு நயினார் நாகேந்திரன்,‘‘அதுபற்றி பின்னர் பேசலாம்” என்றார்.