தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

ஊட்டி தாவரவியல் பூங்காவில் பூத்துக்குலுங்கும் ‘ஸ்டார் ஆப் பெத்லகேம்’ மலர்கள்: சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசிப்பு

ஊட்டி:‘ஸ்டார் ஆப் பெத்லகேம்’ என அழைக்கப்படும் ஆர்னிதோகலம் மலர்கள் ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா கண்ணாடி மாளிகையில் பூத்து குலுங்குகிறது. இதனை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர். ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் உள்ள கண்ணாடி மாளிகையில் பெகோனியா, பால்சம், லிசியந்தஸ், சைக்ளோமென், ஆர்கிட், அந்தோரியம் உள்ளிட்ட பல்வேறு மலர் வகைகளும், கேக்டஸ் எனப்படும் பல்வேறு வகையான கள்ளிச் செடிகளும் இங்கு வைக்கப்பட்டுள்ளன. இதனை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர். இதில் ‘ஸ்டார் ஆப் பெத்லகேம்’ எனப்படும் மலர்கள் கண்ணாடி மாளிகையில் பூத்து குலுங்குகிறது.

இவை வற்றாத தாவரங்களின் ஒரு இனமாகும். தெற்கு ஐரோப்பா மற்றும் தென்னாப்பிரிக்காவை பூர்வீகமாக கொண்டது. இது அஸ்பாரகேசி குடும்பத்தைச் சேர்ந்தது. இந்த இனத்தின் பொதுவான பெயர் ‘ஸ்டார் ஆப் பெத்லகேம்’ ஆகும். இந்த மலர்கள் இயேசு பிறந்த பெத்லகேமில் அதிகம் காணப்படுவதால் அதற்கு இந்த பெயர் வந்துள்ளது. கண்ணாடி மாளிகையில் நட்சத்திர வடிவில் இந்த மலர்கள் பூத்து குலுங்குகிறது. இவற்றை அங்கு வரும் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்வதுடன், அதன்முன் நின்று புகைப்படம் எடுத்து செல்கின்றனர்.