தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் அலங்காரம் கூடுதல் நாட்கள் வைக்க முடிவு

Advertisement

ஊட்டி: சுற்றுலா பயணிகள் வருகை தொடர்ந்து இருப்பதால், ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் தொட்டி அலங்காரங்கள் மேலும் சில நாட்களுக்கு வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். தற்போது 2வது சீசன் என்பதால், வெளிமாநில மற்றும் வெளி நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் அதிகளவு வருகின்றனர். கடந்த செப்டம்பர் மாதம் துவங்கிய 2ம் சீசன் நாளையுடன் முடிகிறது. கடந்த 2 மாதங்களில் ஆயுத பூஜை விடுமுறை, தீபாவளி விடுமுறை உள்ளிட்ட அரசு விடுமுறை மற்றும் வார விடுமுறை என தொடர் விடுமுறை வந்ததால், ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிந்தனர்.

இவர்களை மகிழ்விக்கும் பொருட்டு ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 15 ஆயிரம் தொட்டிகளை கொண்டு பல்வேறு மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. சிறிய புல் மைதானத்தில் அழகிய வடிவங்களில் மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. கடந்த வாரம் பெய்த மழையால், இந்த தொட்டிகளில் வைக்கப்பட்டிருந்த மலர் செடிகள் அழுகியதாலும், சில தாவரங்கள் அதிகளவில் வளர்ச்சியடைந்ததால், அலங்காரங்கள் அலங்கோலமாக காட்சியளித்தது.

மேலும், புல் மைதானங்களும் சேறும் சகதியுமாக மாறியது.

எனவே, அலங்காரங்களில் பாதிக்கப்பட்ட ெதாட்டிகளை அகற்றிவிட்டு, அலங்கார தாவரங்களைக் கொண்டு மாடங்களில் அலங்காரம் செய்யப்பட்டது. மாடங்களில் உள்ள ஒரு சில தொட்டிகளில் மலர்கள் பாதிக்காமல் உள்ளதாலும், சுற்றுலா பயணிகள் வருகை குறையாமல் இருப்பதாலும், மேலும், சில நாட்களுக்கு இந்த மலர் அலங்காரங்களை வைக்க பூங்கா நிர்வாகம் முடிவு செய்துள்ளது. எனவே, நவம்பர் மாதம் 2வது வாரம் வரை ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் மலர் அலங்காரங்கணை கண்டு ரசித்து செல்லலாம்.

Advertisement