தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஊட்டி தாவரவியல் பூங்கா நர்சரியில் அலங்கார செடிகள் உற்பத்தி தீவிரம்

Advertisement

ஊட்டி: ஊட்டி தாவரவியல் பூங்கா நர்சரியில் 2வது சீசனுக்காக மலர் அலங்கார செடிகள் உற்பத்தி தீவிரமாக நடந்து வருகிறது.நீலகிரி மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் பல்வேறு பூங்காக்கள் மற்றும் பண்ணைகள் உள்ளன. இங்கு பல்வேறு வகையான மலர் செடிகள், மூலிகைச் செடிகள், அலங்கார செடிகள், மரக்கன்றுகள் ஆகியவை உற்பத்தி செய்யப்படுகின்றன. இவை தோட்டக்கலை துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து பூங்காக்கள் மற்றும் பண்ணைகளில் நடவு செய்யப்படுகின்றன. மேலும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காகவும், விவசாயிகளுக்காகவும் இதன் நாற்றுகள் விற்பனை செய்யப்படுகின்றன.

இந்த நிலையில் வருகிற செப்டம்பர் மாதம் துவங்க உள்ள 2வது சீசனுக்காக தாவரவியல் பூங்கா மற்றும் தேயிலை பூங்காவில் உள்ள நர்சரிகளில் ஸ்பைடர், ஐரீஷ், ஐடிராலிக்கா உள்பட பல்வேறு மலர் அலங்கார செடிகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இவைகளை பராமரிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். மலர் அலங்கார செடிகள் தயாரானவுடன் பூங்காவில் நடவு செய்வது மட்டுமின்றி விற்பனை செய்யப்பட உள்ளதாக பூங்கா ஊழியர்கள் தெரிவித்தனர்.

Advertisement