தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஊட்டியில் மழை காரணமாக தேயிலை மகசூல் அதிகரிப்பு

*காய்கறி விவசாய பணிகள் துவக்கம்
Advertisement

ஊட்டி : ஊட்டி சுற்று வட்டார பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக தேயிலை மகசூல் அதிகரித்துள்ளதுடன், மலை காய்கறி விவசாய பணிகள் துவங்கியுள்ளன.

நீலகிரி மாவட்டத்தில் ஆண்டு தோறும் ஜூன் மாதம் துவங்கி டிசம்பர் வரை தென்மேற்கு, வடகிழக்கு என இரு பருவமழை மழை கொட்டி தீர்க்கும். பருவமழையை நம்பி மலை காய்கறி விவசாயம் நடைபெறுவது வழக்கம்.

மழை சமயத்தில் விவசாயிகள் மலை சாிவு பகுதிகள் மற்றும் சமமான பகுதிகளில் அதிகளவு விவசாயம் மேற்க்கொள்வார்கள். இந்நிலையில், இந்தாண்டுக்கான தென்மேற்கு பருவமழை கடந்த மே இறுதி வாரத்தில் துவங்கியது. 40 நாட்களுக்கும் மேலாக பரவலாக மழை பெய்து வருகிறது. ஊட்டி சுற்று வட்டார பகுதிகள், மஞ்சூர், கூடலூர் மற்றும் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருவதால் தேயிலை மகசூல் அதிகரித்துள்ளது. விவசாயிகள் தங்களது தேயிலை தோட்டங்களில் உரமிட்டு பராமரிக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதே போல் மலை காய்கறி விவசாயமும் சுறுசுறுப்படைந்துள்ளது. ஏற்கனவே பயிரிட்ட உருளைகிழங்கு, கேரட், பீட்ரூட் உள்ளிட்டவைகளை அறுவடை செய்து மார்கெட்டிற்கு அனுப்பி வருகின்றனர். கொல்லிமலை, முத்தோரை பாலாடா, கேத்தி பாலாடா, தேனாடுகம்பை, எப்பநாடு உள்ளிட்ட பகுதிகளில் விளை நிலங்களை சமன்படுத்தி அங்கு முட்டைகோஸ் உள்ளிட்ட காய்கறி விவசாயம் மேற்கொள்ளும் பணிகளில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘‘இம்முறை நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே துவங்கிய நிலையில், விவசாயத்திற்கு ஏற்றதாக உள்ளது. இதனை பயன்படுத்தி காய்கறி பயிரிடும் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறோம், என்றனர்.

Advertisement