தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

ஊட்டி- பார்சன்ஸ்வேலி இடையே குண்டும் குழியுமான சாலையால் வாகன ஓட்டிகள் கடும் அவதி

ஊட்டி : ஊட்டியில் இருந்து பார்சன்ஸ்வேலி செல்லும் சாலை பயன்படுத்த முடியாத அளவிற்கு குண்டும் குழியுமாக மாறியுள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்துள்ளனர். விரைந்து சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இருந்து சுமார் 17 கி.மீ தொலைவில் பார்சன்ஸ்வேலி பகுதி அமைந்துள்ளது.

நீலகிரி வன கோட்டத்திற்குட்பட்ட இப்பகுதியில் 6-க்கும் மேற்பட்ட தோடர் பழங்குடியின கிராமங்கள் உள்ளன. பார்சன்ஸ்வேலி பகுதியில் சுமார் 15-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இதுதவிர பார்சன்ஸ்வேலி அணை ஊட்டி நகராட்சியின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், மின் உற்பத்திக்கு ஆதாரமாகவும் உள்ளது. இப்பகுதியில் மின்வாரிய குடியிருப்பு உள்ளிட்டவைகள் உள்ளன.

ஊட்டியில் இருந்து அரசு போக்குவரத்து கழகத்தின் மூலம் அரசு பஸ் இயக்கப்படுகிறது. இந்நிலையில் ஊட்டி தீட்டுக்கல் அருகே இந்திய மண் மற்றும் நீர்வள ஆராய்ச்சி நிலைய பகுதியில் இருந்து நகராட்சி குப்பை குழி வரை சுமார் 2 கிமீ தூரத்திற்கு சாலை மிகவும் மோசமாக சேதம் அடைந்துள்ளது.

கடந்த ஒரு மாத காலமாக பெய்து வரும் மழை காரணமாக சாலையில் உள்ள பள்ளங்களில் மழைநீர் தேங்கியது. இதில் அரசு பஸ்கள், காய்கறி பாரம் ஏற்றி செல்லும் லாரிகள், குப்பை குழிக்கு செல்லும் நகராட்சி வாகனங்கள் உள்ளிட்டவை அடிக்கடி சென்று வந்ததால் அவை பெரிய அளவில் பள்ளங்களாக மாறி உள்ளன. பல இடங்களில் சாலையே இல்லாத அளவிற்கு ஆளை விழுங்கும் அளவிற்கு பெரிய பெரிய பள்ளங்களாக உள்ளன.

இப்பள்ளங்களில் மழை நீர் தேங்கி குளம் போல காட்சியளிக்கிறது. கார் உள்ளிட்ட சிறு வாகனங்களில் செல்வோர் கடும் அவதி அடைந்து வருகின்றனர். குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். எனவே பழுதடைந்த சாலையை விரைவில் சீரமைக்க நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.