தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஊட்டி-கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் குட்டியுடன் இரவில் யானைகள் நடமாட்டம்: போக்குவரத்து பாதிப்பு

கூடலூர்: ஊட்டி-கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் குட்டியுடன் இரவில் யானைகள் நடமாடியதால் அவ்வழித்தடத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நீலகிரி மாவட்டம் ஊட்டி-கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் கூடலூரை அடுத்து சனிபகவான் கோயில் பகுதியில் நேற்று இரவு குட்டியுடன் கூடிய யானை கூட்டம் நடமாடியது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகன ஓட்டிகள் வாகனங்களை நிறுத்திவிட்டு காத்திருந்தனர். யானைகள் வனப்பகுதிக்குள் சென்ற பின்னர் அங்கிருந்து வாகனங்களை எடுத்து சென்றனர்.

Advertisement

இந்த சாலையில் சில்வர் கிளவுட் முதல் ஊசிமலை காட்சி முனை பகுதி வரையில் உள்ள சாலையில் அவ்வப்போது யானைகள் நடமாட்டம் காணப்படுகிறது. இங்குள்ள வனப்பகுதியில் சுற்றித்திரியும் காட்டு யானைகள் சில நேரங்களில் சாலைகளில் நடமாடி வருகின்றன. கடந்த சில வாரங்களுக்கு முன் ஊசி மலை காட்சி முனை பகுதியில் குட்டியுடன் கூடிய யானை நடமாடியதால் சுற்றுலாப் பயணிகளுக்கு அங்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.

யானைகள் அங்கிருந்து வேறு பகுதிக்கு சென்றதை அடுத்து சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். மேலும் கேரளாவில் இருந்து ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் இரவு நேரத்தில் அந்த வழியாக மீண்டும் திரும்பிச் செல்கின்றனர். எனவே இந்த சாலை வழியாக இரவு நேரத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் இப்பகுதியை கடந்து செல்ல வேண்டும் என்றும், யானைகளை விரட்டும் நடவடிக்கைகளில் வாகன ஓட்டிகள் ஈடுபடக்கூடாது என வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

Advertisement

Related News