தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் அதிகளவில் காய்த்து தொங்கும் பப்பாளி

ஊட்டி : ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் உள்ள அழகு தாவரங்களில் ஒன்றான பப்பாளி மரத்தில் பழங்கள் அதிகளவு காய்த்துள்ளதால், அதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர். ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் பல்வேறு அழகு தாவரங்கள், மரங்கள் மற்றும் மலர்செடிகள் உள்ளன.

Advertisement

வெளி நாடுகளில் காணப்படும் பெரணி செடிகள், கள்ளிச்செடிகள் இங்கு வைக்கப்பட்டுள்ளன. இதனை இங்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் கண்டு ரசித்து செல்வதுடன், இதுதொடர்பான ஆராய்ச்சிகளும் மேற்கொள்கின்றனர். இந்த பூங்காவில் உள்ள வெளிநாட்டு மரங்களில் அவ்வப்போது மலர்கள் பூத்து காணப்படும்.

குறிப்பாக, சீனாவின் தேசிய மலரான குயின்ஆப் சைனா போன்ற மலர்கள் பூத்து சுற்றுலா பயணிகளை ஆச்சரியத்திற்குள்ளாக்கும். இந்நிலையில், ஊட்டி தாவரவியல் பூங்காவில் வைக்கப்பட்டுள்ள பப்பாளி மரம் ஒன்றில் (அழகு தாவர வகை) சிறு சிறு பப்பாளி பழங்கள் அதிகளவு காய்த்துள்ளன.

பச்சை மற்றும் மஞ்சள் நிறத்தில் காணப்படும் இந்த பழங்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர். அழகு தாவரங்களில் காய்த்துள்ள இந்த பழங்களை பார்த்து ரசித்து செல்லும் சுற்றுலா பயணிகள் அதனை சுவைக்க அச்சப்படுகின்றனர்.

Advertisement

Related News