தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

உதகை சுற்றுவட்டார பகுதிகளில் காணப்படும் உறைபனி: தலைகுந்தா பகுதியில் 0 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவு

உதகை: உதகை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் உறைபனி காண ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய மூன்று மாத காலங்கள் குளிர்கால சீசன் காலமாககும், அந்த மூன்று மாதங்களும் அதிகாலை நேரங்களில் வெப்பநிலை குறைவதின் காரணமாக, கூரைகள், வீடுகள், வாகனங்கள், புல்வெளிகள் என அனைத்து வெளிப்பகுதிகளிலும் நீர்த்துளிகள் உறைவதால் உறைபனி தாக்கம் இருக்கும். கடும் குளிரும் நிலவுவதால் பொதுமக்கள் இயல்பு வழக்கை என்பது கடுமையாக பாதிக்கப்படுவது வழக்கம்.

Advertisement

ஆனால் இந்த ஆண்டு தொடர்மழை மற்றும் புயல் காரணமாக சற்று தாமதாக தொடங்கியிருக்கிறது. நேற்றைய தினம் முதல் உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உறைபனி தாக்கம் என்பது காணப்பட்ட நிலையில், இன்று இரண்டாவது நாளாக பனியின் தாக்கம் என்பது அதிகமாக இருக்கிறது. குறிப்பாக வெப்பநிலை 0 டிகிரியை எட்டியிருக்கிறது தலைகுந்தா பகுதியில் புல்வெளிகள் மற்றும் வீடுகள் அங்கு நிறுத்திவைக்கப்பட்ட வாகனங்கள் மீது உறைபனி என்பது படிந்து காணப்படுகிறது. அதிகாலை நேரங்களில் இதனை பார்ப்பதற்கு குட்டி காஸ்மீர் போல காட்சி அளிக்கிறது.

கடும் குளிர் நிலவியதால் பொதுமக்கள் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டு இருக்கிறது.அதனால் மக்கள் வீடுகளுக்குள்ளே முடங்கும் நிலை ஏற்பட்ட நிலையில் அந்த தலைகுந்தா பகுதியில் அதிகளவில் உறைபனி காணப்பட்டதால் அந்த வழியாக வந்த சில சுற்றுலா பயணிகள் அதனை கண்டு வியந்து மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அந்த பனியை எடுத்து விளையாடியும் அதைபோல் புகைப்படம் எடுத்தும் மிகிழ்ந்து இருக்கிறார்கள். இனி வரும் நாட்கள் இந்த பனியின் தாக்கம் என்பது அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement