தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

ஊட்டியில் பின் தொடர்ந்து தொல்லை காரில் லிப்ட் தருவதாக இளம்பெண்ணுக்கு டார்ச்சர்

*வியாபாரி கைது

ஊட்டி : ஊட்டியில் காரில் லிப்ட் கொடுப்பதாக கூறி இளம்பெண்ணின் கையைப் பிடித்து இழுத்து கட்டாயப்படுத்திய வியாபாரி கைது செய்யப்பட்டார். நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உள்ள தட்டனேரியை சேர்ந்தவர் நவநீதன் (39). வியாபாரி. இவரது பக்கத்து கிராமத்தை சேர்ந்த 30 வயது பெண்ணை இவர் பின் தொடர்ந்துள்ளார். இளம்பெண்ணுக்கு கணவர், குழந்தைகள் உள்ளனர்.

ஊட்டியில் உள்ள தனியார் நிறுவன ஊழியராக இளம்பெண் வேலை முடிந்து வீட்டிற்கு வர சரிவர பஸ் வசதி இல்லாததால் கல்லட்டி சாலையில் நடந்து ஊட்டி வந்து அதன் பின்னர் வீடு திரும்புவார். இந்நிலையில் இளம்பெண்ணை பின் தொடர்ந்த நவநீதன் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் வேலை செய்யும் கம்பெனிக்கு சென்று செல்போன் எண்ணை கேட்டு தொல்லை கொடுத்துள்ளார். இதனை அங்கிருந்தவர்கள் கண்டித்ததால் நவநீதன் திரும்பினார்.

அதன் பின்னர் இளம்பெண்ணை நவநீதன் சுற்றி சுற்றி வந்துள்ளார். இதனை கணவரிடம் தெரிவித்தால் வேலையை விட்டு நிறுத்திவிடுவோர் என்று அஞ்சிய இளம்பெண் அதனை தவிர்த்தார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இளம்பெண் ஊட்டி பஸ்சிற்காக காத்திருந்தார். அப்போது அங்கு காரில் வந்த நவநீதன் லிப்ட் கொடுப்பதாக கூறி இளம்பெண்ணை அழைத்துள்ளார். ஆனால் அவர் வர மறுத்தார்.

இதில் ஆத்திரமடைந்த நவநீதன் இளம்பெண்ணை வலுக்கட்டாயகமாக கையை பிடித்து இழுத்து லிப்ட் தருவதாக தொல்லை கொடுத்தார். இதில் அதிர்ச்சியடைந்த இளம்பெண் அலறி சத்தம்போட்டார். பொதுமக்கள் உதவிக்கு ஓடி வந்தனர். இதனையடுத்து நவநீதன் ஓட்டம் பிடித்தார். இது குறித்து இளம்பெண் ஊட்டி புதுமந்து போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நேற்று முன் நவநீதனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.