தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஊட்டி அருகே கூடுதல் வகுப்பறைகள் கட்டித்தரக்கோரி பள்ளி மாணவர்கள் திடீர் சாலை மறியல்

Advertisement

ஊட்டி : ஊட்டி அருகே கூடுதல் வகுப்பறைகள் ஏற்படுத்தி தரக்கோரி சோலாடா அரசு பள்ளி மாணவர்கள் ஊட்டி - மசினகுடி சாலையில் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஊட்டி அருகே கல்லட்டி, சோலாடா உட்பட பல்வேறு கிராமங்கள் உள்ளன. சோலாடா கிராமத்தில் அரசு நடுநிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சுமார் 90க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் போதிய வகுப்பறை கட்டிடங்கள் இல்லாத நிலையில், மாணவ, மாணவிகள் பாதிக்கப்பட்டு வருவதாக தெரிகிறது.

பல முறை இப்பள்ளி மாணவர்கள் சார்பில் பெற்றோர்கள் மாவட்ட நிர்வாகம் மற்றும் கல்வித்துறை அதிகாரிகளுக்கு கூடுதல் கட்டிடங்கள் (வகுப்பறைகள்) கட்டித்தர வேண்டும் என மனு அளித்துள்ளதாக தெரிகிறது.

ஆனால், இப்பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைகள் கட்டித்தராத நிலையில், மாணவ, மாணவிகள் குறைந்த வகுப்பறைகளில் படிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டித்தர வேண்டும் என வலியுறுத்தி நேற்று பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் ஊட்டி - மசினகுடி சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், இந்த வழித்தடத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து, அங்கு சென்ற ஊட்டி ஆர்டிஓ சதீஷ் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். இதில், உடன்பாடு ஏற்படவே மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் சாலை மறியலை கைவிட்டனர். இந்த திடீர் சாலை மறியல் போராட்டத்தால், இந்த வழித்தடத்தில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், உள்ளூர் மக்கள், சுற்றுலா பயணிகள் பாதிக்கப்பட்டனர்.

Advertisement