தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆன்லைனில் ஆர்டர் செய்த பொடி தோசையில் பூரான்: சாப்பிட்ட வாலிபர் மயக்கம்

மன்னார்குடி: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ஆர்பி சிவம் நகரை சேர்ந்தவர் பிரவீன்குமார்(23). வடசேரி சாலையில் உள்ள தனியார் பள்ளி அருகே புத்தக கடை வைத்துள்ளார். நேற்று காலை கடையை திறந்ததும் ஆன்லைனில் பிரபல உணவு நிறுவனத்தின் ஆப் மூலம் பொடி தோசை ஆர்டர் செய்தார். சிறிது நேரத்தில் அந்த நிறுவன ஊழியர் மூலம் மன்னார்குடியில் உள்ள பிரபல சைவ உணவகத்தில் இருந்து பொடி தோசை வந்தது. இதை பிரவீன்குமார் சாப்பிட்டுக்கொண்டிருந்த போது, தொண்டையில் எரிச்சல் ஏற்பட்டது. அப்போது பொடி தோசையில் பாதி அளவில் பூரான் ஒன்று இறந்து கிடந்தது தெரியவந்தது. பாதி பூரானை அவர் சாப்பிட்டிருக்கலாம்.
Advertisement

பின்னர் பிரவீன் குமாருக்கு வாந்தி ஏற்பட்டது. சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தார். அப்போது கடைக்கு வந்தவர்கள் பிரவீன்குமாரை சிகிச்சைக்காக மன்னார்குடி அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்தனர். தகவல் அறிந்ததும் உணவு பாதுகாப்பு அலுவலர் அழகுவேல் சம்பந்தப்பட்ட உணவகத்துக்கு சென்று ஆய்வு செய்ததோடு உணவு பொருட்களின் மாதிரிகளை சேகரித்து எடுத்து சென்றனர். பொடி தோசையில் பூரான் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement