தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

ஆன்லைன் சூதாட்ட இணையதளத்தின் ரூ.110 கோடி முடக்கம்; பிரபலங்களுக்கு சிக்கல்: அமலாக்கத்துறை நடவடிக்கை

புதுடெல்லி: சட்டவிரோத ஆன்லைன் சூதாட்ட இணையதளம் மீதான பணமோசடி வழக்கில், பிரபலங்கள் பெயர்களைப் பயன்படுத்தி செயல்பட்ட நிறுவனத்தின் ரூ.110 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.சைப்ரஸ் நாட்டை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ‘பாரிமேட்ச்’ என்ற சட்டவிரோத ஆன்லைன் சூதாட்ட நிறுவனம் மீதான பணமோசடி தடுப்புச் சட்ட வழக்கின் கீழ், அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. முன்னதாக நாடு முழுவதும் பல இடங்களில் அமலாக்கத்துறையால் நடத்தப்பட்ட சோதனைகளில், பல்வேறு பினாமி வங்கிக் கணக்குகளில் வைக்கப்பட்டிருந்த 110 கோடி ரூபாய் முடக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த சோதனைகளின்போது குறைந்தது 1,200 கடன் அட்டைகளும் கைப்பற்றப்பட்டதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. மும்பை இணையவழிக் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில் அமலாக்கத்துறை இந்த விசாரணையைத் தொடங்கியது. விசாரணையில், இந்த சூதாட்ட இணையதளம், ஆன்லைன் விளையாட்டுப் போட்டிகளுக்கு நிதி வழங்குவது மற்றும் பிரபலங்களைக் கொண்டு விளம்பரம் செய்வது போன்ற சட்டவிரோத சந்தைப்படுத்தல் உத்திகள் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானது தெரியவந்துள்ளது.

அதிக வருமானம் தருவதாக ஆசை காட்டி முதலீட்டாளர்களை ஏமாற்றி, ஓர் ஆண்டில் 3,000 கோடி ரூபாய்க்கு மேல் சம்பாதித்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் வீரர்களான சுனில் நரேன், நிக்கோலஸ் பூரன், பிரபல பாலிவுட் நடிகை மற்றும் இந்திய ராப் பாடகர் ஆகியோர் இந்த நிறுவனத்தின் விளம்பரத் தூதர்களாக செயல்பட்டதும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

Related News