தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆன்லைன் டிரேடிங் மூலம் மூதாட்டியிடம் ரூ.2.49 கோடி மோசடி: 2 பேர் கைது

சென்னை: பாலவாக்கம் பகுதியை சேர்ந்த 70 வயது மூதாட்டி ஒருவர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கடந்த மாதம் 19ம் தேதி புகார் ஒன்று அளித்தார். அதில், நான் விளையாட்டு துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். ஆன்லைன் டிரேடிங்கில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்ற விளம்பரத்தை பார்த்து, கடந்த ஆண்டு நவம்பர் 20ம் தேதி முதல் ஜனவரி 18ம் தேதி வரை ஆன்லைன் செயலி மூலம் ரூ.2.49 கோடி முதலீடு செய்தேன்.

Advertisement

அதில் எந்தவித லாபமும் இல்லாததால், முதலீடு செய்த பணத்தை திரும்ப எடுக்க முயன்ற போது, அந்த ஆன்லைன் நிறுவனம் பல்வேறு காரணங்களை கூறி பணத்தை திரும்ப எடுப்பதை தடுத்து, மேலும் பணம் முதலீடு செய்யும்படி வலியுறுத்தியது. அதன் பிறகு நான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தேன். எனவே ஆன்லைன் டிரேடிங்கில் முதலீடு செய்த பணத்தை திரும்ப பெற்று தர வேண்டும், என்று தெரிவித்து இருந்தார்.

இதுகுறித்து விசாரணை நடத்த போலீஸ் கமிஷனர் அருண் மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் ராதிகாவுக்கு உத்தரவிட்டார். அதை தொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர் ஸ்ரீநாதா மற்றும் உதவி கமிஷனர் ராகவி, இன்ஸ்பெக்டர் மேனகா தலைமையிலான குழுவினர் விசாரணை நடத்தினர். அதில், மோசடி ஆசாமி, திருப்பூர் ஸ்ரீசாய் கிருஷ்ணா ஓட்டலுக்கு சொந்தமான வங்கி கணக்கை பயன்படுத்தியது தெரியவந்தது.

அந்த வங்கி கணக்கு எண்ணை வைத்து விசாரித்த போது, திருப்பூர் பகுதியை சேர்ந்த ஜெயராஜ் (32) மற்றும் தூத்துக்குடியை சேர்ந்த ராம்குமார் (32) ஆகியோர் பல்வேறு வங்கி கணக்குகளை தொடங்கி மோசடி கும்பலுக்கு பரிவர்த்தனை செய்ய உதவியது தெரியவந்தது. பணத்திற்கான கமிஷன் தொகையும் அவர்கள் பெற்றது உறுதியானது. மேலும், இருவரின் வங்கி கணக்கு விவரங்களை ஆய்வு செய்த போது, பல்வேறு மாநிலங்களில் மோசடி வழக்குகளில் தொடர்பில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Advertisement