தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆன்லைன் டிரேடிங் மூலம் ரூ.1.62 கோடி மோசடி தவெக நிர்வாகி யூ-டியூபர் விஷ்ணுவை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை: மத்திய குற்றப்பிரிவு போலீஸ் நடவடிக்கை

Advertisement

சென்னை: சென்னை விருகம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் விஷ்ணு. யூடியூபரான இவர், தவெக கட்சியில் நிர்வாகியாகவும் உள்ளார். சில நாட்களுக்கு முன்பு அவரது நண்பர் தங்கைக்கு வாட்ஸ் அப் மூலம் காதல் வலைவிரித்து வசமாக சிக்கினார். அப்போது அவரது நண்பர்கள் இணைந்து விஷ்ணுவை தி.நகரில் உள்ள ஒரு வீட்டிற்கு அழைத்து சரமாரியாக தாக்கினர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. அதேநேரம் அவரது மனைவி அஸ்மிதா பிரிந்து வாழ்ந்து வரும் என் மீது அவதூறு பரப்பி துன்புறுத்துவதாக விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி மகளிர் போலீசார் விசாரணை நடத்திய போது விஷ்ணு அவரது மனைவிபற்றி திட்டமிட்டு சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பியது தெரியவந்தது.

அதைதொடர்ந்து விஷ்ணு மீது 7 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கடந்த மாதம் 19ம் தேதி அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர். அதேநேரம் விஷ்ணு ஆன்லைன் டிரேடிங் மூலம் ரூ.1.62 கோடி அளவுக்கு மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்டது. அதன்படி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தவெக நிர்வாகி விஷ்ணு மீது வழக்கு பதிவு செய்து புழல் சிறையில் உள்ள அவரை கைது செய்தனர். அதனை தொடர்ந்து ஆன்லைன் டிரேடிங் மோசடி தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் எழும்பூர் நீதிமன்ற அனுமதியுடன் 3 நாள் காவலில் எடுத்து விஷ்ணுவிடம் விசாரிக்கின்றனர். இந்த விசாரணையில் ஆன்லைன் டிரேடிங் மோசடியில் பலருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. இந்த விசாரணையின் முடிவில் தான் விஷ்ணு எத்தனை கோடி வரை மோசடி செய்துள்ளார் என்பது குறித்து தெரியவரும்.

Advertisement

Related News