ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் அக்.1ம் தேதி அமல்
புதுடெல்லி: அனைத்து வகையான ஆன்லைன் பண விளையாட்டுக்களையும் தடை செய்யும் ஆன்லைன் கேமிங் விளம்பரம் மற்றும் ஒழுங்குமுறை சட்டம் அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் அமல்படுத்தப்படுகிறது. டெல்லியில் ஏஐ உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இது தொடர்பான ஆலோசனை தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேசுகையில், ‘‘ஆன்லைன் கேமிங் சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகும், அரசு தொழில்துறையுடன் கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளது. அவர்களுடன் பலமுறை விவாதித்துள்ளோம். கடந்த 3 ஆண்டாக கலந்துரையாடி வருகின்றோம்.
சட்டம் இயற்றிய பிறகு மீண்டும் ஒரு முறை நாங்கள் தொழில்துறையினருடன் பேசினோம். வங்கிகளுடனும், சாத்தியமான அனைத்து பங்குதாரர்களுடனும் கலந்துரையாடினோம். மேலும் விதிகளை இறுதி செய்துள்ளோம். அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் விதிகள் அமல்படுத்தப்படும். அனைத்து வகையான பணத்தை வைத்து ஆன்லைனில் சூதாடும் விளையாட்டுக்களையும் தடை செய்யும் ஆன்லைன் கேமிங் விளம்பரம் மற்றும் ஒழுங்குமுறை சட்டம் அக்டோபர் 1ம் தேதி முதல் அமல்படுத்தப்படும்” என்றார்.