தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆன்லைன் சூதாட்ட செயலி வழக்கு; பிரகாஷ்ராஜ், விஜய் தேவரகொண்டா, நிதிஅகர்வால் உள்பட 29 பேர் மீது வழக்கு: அமலாக்கத்துறை நடவடிக்கை

Advertisement

திருமலை: ஆன்லைன் சூதாட்ட செயலி வழக்கு தொடர்பாக பிரபல நடிகர்கள் பிரகாஷ்ராஜ், விஜய்தேவரகொண்டா, நடிகை நிதிஅகர்வால் மற்றும் யூடியூபர்கள் உள்பட 29 பிரபலங்கள் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. அவர்களிடம் விரைவில் விசாரணை நடத்தப்பட உள்ளது. பொதுமக்களை ஏமாற்றும் வகையில் உழைப்பின்றி எளிமையாக பணம் சம்பாதிக்கவும், சிறிய அளவில் முதலீடு செய்து கூடுதல் பணம் சம்பாதிக்கலாம் என பல்வேறு வகையில் ஆன்லைனில் சூதாட்டம் நடந்து வருகிறது. இதற்காக சூதாட்ட செயலிகளும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சூதாட்ட செயலிகளை பிரபல நடிகர்கள், நடிகைகள், யூடியூபர்களை கொண்டு விளம்பரம் செய்யப்படுகிறது. ஆனால் இந்த செயலிகளால் பொதுமக்கள், இளைஞர்கள், பெண்கள் என பல தரப்பினர் பெருமளவு பாதிக்கப்படுகின்றனர். இவ்வாறு பாதிக்கப்படுபவர்களில் பலர் தற்கொலை செய்து கொள்கின்றனர்.

இதுதொடர்பாக பொதுமக்கள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சூதாட்ட செயலிகள் மூலம் விளம்பரம் செய்ததாக மொத்தம் 29 திரைப்பட பிரபலங்கள் மீது ஐதராபாத் மற்றும் சைபராபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் அந்த வழக்குப்பதிவின் அடிப்படையில் மேற்கண்ட 29 பேர் மீது அமலாக்கத்துறை இயக்குனரகம் வழக்குப்பதிவு செய்துள்ளது. அதன்படி நடிகர்கள் விஜய் தேவரகொண்டா, பிரகாஷ்ராஜ், நடிகைகள் மஞ்சுலட்சுமி, நிதிஅகர்வால், அனன்யாநாகல்லா, முகி மற்றும் நீதுஅகர்வால், விஷ்ணுபிரியா, வர்ஷினி, சிரி ஹனுமந்து மற்றும் வசந்திகிருஷ்ணன் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் மற்றும் யூடியூப் பிரபலங்கள் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

இவர்களிடம் விரைவில் விசாரணை நடத்தப்பட உள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. விசாரணையின்போது, அதிகாரிகள் அனைவரின் வாக்குமூலங்களையும் பதிவு செய்வார்கள். இதைதொடர்ந்து மேற்கொண்டு கடுமையானநடவடிக்கை இருக்கும் என தெரிகிறது. சூதாட்ட செயலிகள் விளம்பரப்படுத்தியதாக பிரபல நடிகர், நடிகைககள், யூடியூபர்கள் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ள சம்பவம் திரையுலக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement