தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆன்லைன் மூலம் பதிவு செய்து அரசு பேருந்தில் பயணித்த 13 பேருக்கு பரிசு தொகை: போக்குவரத்துக்கழகம் அறிவிப்பு

சென்னை: ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து அரசு பேருந்தில் பயணித்த 13 பேருக்கு பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளது. தமிழ்நாடு அரசின் தொலைதூர பேருந்துகளில், www.tnstc.in, TNSTC செயலி ஆகியவை மூலமாக பயணச் சீட்டு முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, வார விடுமுறை நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களை தவிர்த்து இதர நாட்களில் முன்பதிவு செய்து பயணிப்போரை ஊக்குவிக்கும் விதமாக கணினி மூலம் குலுக்கல் முறையில் பயணிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
Advertisement

இத்திட்டத்தில் ஜூன் 2024 முதல் 13 பயணிகளை கணினி மூலம் குலுக்கல் முறையில் தேர்வு செய்து, முதல் 3 பயணிகளுக்கு ₹10 ஆயிரமும், இதர 10 பயணிகளுக்கு ₹2 ஆயிரமும் வழங்க முடிவு செய்யப்பட்டது. இதன்படி செப்டம்பர்-2024 மாதத்திற்கான 13 பயணிகளை கணினி குலுக்கல் முறையில் சென்னை மாநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் ஆல்பி ஜான் வர்கீஸ் தேர்வு செய்துள்ளார். இவர்களுக்கு விரைவில் பரிசுகள் வழங்கப்படும் என அவர் கூறியுள்ளார். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Related News