தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கடந்த அக்டோபர் மாதத்தில் ஆன்லைனில் பணத்தை இழந்த 109 பேரிடம் ரூ.1.37 கோடி ஒப்படைப்பு: சென்னை சைபர் க்ரைம் நடவடிக்கை

சென்னை: சென்னையில் வெளிநாடுகளில் இருந்து போதை பொருள் பார்சல் வந்ததாகவும், வங்கி அதிகாரி, மின்வாரிய அதிகாரி என பல்வேறு மோசடி மூலம் பணத்தை பறிக்கும் சைபர் குற்றவாளிகள் மீது சென்னை போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவுப்படி சைபர் க்ரைம் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த அக்டோபர் மாதம் சென்னை மத்திய குற்றப்பிரிவில் உள்ள சைபர் க்ரைம் பிரிவுக்கு வந்த புகார்களில் 40 புகார் மனுக்கள் பெற்று 34 மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தப்பட்டு சைபர் குற்றவாளிகள் கைது செய்து அவர்களிடம் இருந்து ரூ.66,59,329 பணம் மீட்கப்பட்டுள்ளது.

Advertisement

அதேபோல் சென்னை பெருநகர வடக்கு மண்டல சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் பெறப்பட்ட புகார்கள் 25 மனுக்கள் மீது விசாரணை மேற்கொண்டு ரூ.29,98,913 பணம், மேற்கு மண்டலத்தில் பெற்றப்பட்ட 30 புகார்கள் பெற்று அதில் 15 மனுக்கள் மீது விசாரணை மேற்கொண்டு ரூ.18,45,501 பணமும், தெற்கு மண்டலத்தில் பெற்றப்பட்ட 50 புகார்கள் பெறப்பட்டு அதில் 21 மனுக்கள் மீது விசாரணை மேற்கொண்டு ரூ.4,20,162 பணமும், கிழக்கு மண்டலத்தில் பெறப்பட்ட 33 புகார் பெற்றபட்டு அதில் 14 மனுக்களின் மீது விசாரணை மேற்கொண்டு ரூ.18,29,523 பணம் என மொத்தம் சென்னை பெருநகர காவல் எல்லையில் ஆன்லைன் மோசடியில் பணத்தை இழந்ததாக 164 மனுக்கள் பெற்று அதில் 109 புகார்தாரர்களின் மனு மீது நடவடிக்கை எடுத்து, சைபர் குற்றவாளிகளிடம் இழந்த ஒரு கோடியே 37 லட்சத்து 53 ஆயிரத்து 428 ரூபாய் பணம் மீட்கப்பட்டது. பின்னர் உரிய சட்ட விதிகளின் படி 109 புகார்தாரர்களிடம் சைபர் க்ரைம் போலீசார் ஒப்படைத்தனர்.

அந்த வகையில் கடந்த 10 மாதத்தில் சென்னை பெருநகர காவல்துறையின் சைபர் க்ரைம் போலீசார் எடுத்த அதிரடி நடவடிக்கையின் மூலம் ரூ.23.03 கோடி பணம் பொதுமக்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Related News