தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஒரு நாள் அடையாள போராட்டம் அரசு ஊழியர்களின் வருகை பதிவேடு குறித்து தெரிவிக்க வேண்டும்: மாவட்ட ஆட்சியர்கள், துறை தலைவர்களுக்கு சுற்றறிக்கை

சென்னை: அரசின் சார்பில் மாவட்ட ஆட்சியர்கள், துறை தலைவர்களுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: அரசு ஊழியர்கள் எந்தவொரு அங்கீகரிக்கப்பட்ட சங்கம் தங்களது உறுப்பினர்களை ஒரே நாளில் விடுப்பு எடுக்க அறிவுறுத்தக் கூடாது. இது சட்டவிதிக்கு விரோதமான நடவடிக்கை என அரசு எச்சரித்துள்ளது. அதன்படி அலுவலர்கள் மற்றும் ஊழியர்களின் வருகை விவரங்களை இன்று காலை 10.15 மணிக்குள் சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்ப வேண்டும். மனிதவள மேலாண்மை துறைக்கும் parjsar@tn.gov.in என்ற மின்னஞ்சலுக்கு அனுப்ப வேண்டும். அனைத்து அரசு அலுவலகங்களின் வருகை நிலை பற்றிய விவரங்களையும் அரசுக்கு அனுப்ப வேண்டும்.

Advertisement

தலைமை செயலகத்தில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் ஊழியர்களின் வருகை விவரங்கள் காலை 10.30 மணிக்குள் மனிதவள மேலாண்மை துறைக்கு அனுப்பப்பட வேண்டும். இந்த விவரங்கள் அனைத்தும் தலைமை செயலாளருக்கு சமர்ப்பிக்கப்படும். அதிகாரிகள் தவறாமல், நேரத்திற்கு முன்பாக தகவல்களை அனுப்பி, அரசுக்கு முழுமையான வருகை நிலை பற்றிய படிவங்களை சமர்ப்பிக்க வேண்டும். பொதுமக்களுக்கு சேவை வழங்கும் அரசுப் பணியாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதே அரசின் நோக்கமாகும்.இவ்வாறு சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement