தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வீட்டில் விளையாடிய ஒன்றரை வயது குழந்தை தண்ணீர் வாளியில் விழுந்து உயிரிழப்பு!

 

Advertisement

சென்னை: சென்னை நந்தனத்தில் வீட்டில் விளையாடிய ஒன்றரை வயது குழந்தை தனிஷ், தண்ணீர் வாளியில் தலை குப்புற விழுந்து உயிரிழந்துள்ளது. மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்த சோகம். சென்னை நந்தனம் ஜோகி தோட்டம் ஹவுசிங் போர்டு குடியிருப்பில் நான்காவது தளத்தில் வசிப்பவர் ஸ்ரீராம். இவர் அம்பத்தூரில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சந்தான லட்சுமி. இந்த தம்பதியின் ஒன்றரை வயது குழந்தை தனிஷ். கடந்த 23ம் தேதி அதே தளத்தில் வசிக்கும் அலமேலு என்பவருக்கு உடல் நலம் சரியில்லாமல் போனதையடுத்து அவரை பார்ப்பதற்காக சந்தான லட்சுமி குழந்தையை தூக்கிக்கொண்டு அவரது வீட்டுக்கு சென்றுள்ளார்.

குழந்தையை கீழே இறக்கிவிட்டு அலமேலுவிடம் அரை மணிநேரத்துக்கும் சந்தான லட்சுமி மற்றும் அவரது குடும்பத்தினரிடம் பேசிக் கொண்டிருந்துள்ளார். அப்போது விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை காணவில்லையே என சந்தான லட்சுமி தேடியுள்ளார். அலமேலு வீட்டு குளியல் அறையில் தண்ணீர் நிரம்பி இருந்த பிளாஸ்டிக் வாளியில் குழந்தை தலை குப்புற விழுந்து மயங்கி கிடந்தது. உடனடியாக குழந்தையை மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை நேற்று இரவு உயிரிழந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக தேனாம்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Advertisement

Related News