தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

எவரெஸ்ட் சிகரத்தில் பனிப்புயலில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிக்கித் தவிப்பு: ஒருவர் பலி, 350 பேர் பாதுகாப்பாக மீட்பு

பெய்ஜிங்: எவரெஸ்ட் சிகரத்தில் ஏற்பட்ட பனிப்புயலில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலையேறுபவர்கள் சிக்கி தவித்து வருகின்றனர். பனிப்புயலில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். உலகின் மிகவும் உயரமான மலைப்பகுதியான எவரெஸ்டில் ஆண்டுதோறும் ஏராளமானவர்கள் மலையேற்றம் செய்வது வழக்கமாகும். நேபாளம் மற்றும் சீன எல்லையில் அமைந்துள்ளதால், இரு நாடுகளில் இருந்தும் ஏராளமான வீரர்கள் மலையேற்றத்துக்கு வருவார்கள். சீனாவில் தேசிய தினம் உள்ளிட்டவற்றை கொண்டாடுவதற்காக தற்போது அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் 8 நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் மலையேற்ற வீரர்கள் எவரெஸ்ட் சிகரத்தில் முகாமிட்டுள்ளனர்.

Advertisement

இந்நிலையில் எவரெஸ்டின் திபெத் பிராந்தியத்தில் கடும் பனிப்புயல் ஏற்பட்டுள்ளது. இது கடல் மட்டத்தில் இருந்து சுமார் 4000 மீட்டர் உயரத்தில் உள்ளது. பனிப்புயல் காரணமாக அங்கு சென்ற சுற்றுலா பயணிகள் உட்பட சுமார் ஆயிரம் பேர் திரும்பி வரமுடியாமல் சிக்கி உள்ளனர். இது குறித்து தகவல் பரவிய நிலையில் மீட்பு குழுவினர் மற்றும் உள்ளூர் கிராம மக்கள் அத்தியாவசிய பொருட்களுடன் அங்கு விரைந்துள்ளனர். பனிப்புயலில் சிக்கிய மலையேற்ற வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார். சுமார் 350க்கும் மேற்பட்ட மலையேற்ற வீரர்கள் பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளனர். இன்னும் 200க்கும் மேற்பட்டோர் எவரெஸ்ட் பனிப்புயலில் சிக்கி உள்ளனர். அவர்களை மீட்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.மேலும் காணாமல் போன மலையேற்ற வீரர்களை தேடும் பணியும் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

Advertisement