தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஓணம் பண்டிகை முடிந்து வெளியூர் திரும்பியவர்களால் பாலக்காடு ரயில் நிலையத்தில் அலைமோதிய பயணிகள்

பாலக்காடு : ஓணம் பண்டிகை விடுமுறை முடிந்து பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ- மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்லும் பயணிகளால் பாலக்காடு ரயில் நிலையத்தில் நேற்று கூட்டம் அலைமோதியது.

Advertisement

ஓணம், மிலாடிநபி, சதயதினக் கொண்டாடங்கள் தொடர்விடுமுறை முடிந்து அரசு மற்றும் தனியார் அலுவலக பணிகளுக்கு திரும்பிய பயணிகள், பள்ளி, கல்லூரிகளின் விடுமுறை முடிந்து திரும்பிய மாணவ, மாணவிகள், விழாவிற்கு வந்துவிட்டு சொந்த ஊர்களுக்கு திரும்பியவர்கள் என பாலக்காடு சந்திப்பு ரயில் நிலையத்தில் நேற்று பயணிகள் கூட்டம் வழக்கத்தை விட அதிகளவில் காணப்பட்டது.

இதனால், பாலக்காடு சந்திப்பில் இருந்து புறப்படும் பாலக்காடு- கோயம்புத்தூர், பாலக்காடு- கோயம்புத்தூர்- ஈரோடு, பாலக்காடு- திருச்சி, பாலக்காடு- சென்னை, பாலக்காடு- திருவனந்தபுரம், மதுரை- பாலக்காடு- திருவனந்தபுரம், பாலக்காடு- தூத்துக்குடி பாலருவி எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்களில் பயணிகள் கூட்டநெரிசல் அதிகளவில் இருந்தது.

டிக்கெட் கவுன்டர்களில் பயணிகள் டிக்கெட் எடுப்பதற்காக நீண்டவரிசையாக காத்திருந்தனர். ஸ்பெஷல் எக்ஸ்பிரஸ், விரைவு ரயில்களிலும் பயணிகள் கூட்டம் அலைமோதியது. திருவிழா முடிந்து சொந்த ஊர்களுக்கு கைக்குழந்தை, குடும்பத்தினருடன் செல்கின்ற பயணிகள் பலர் டிக்கெட் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்ற வண்ணமும் இருந்தனர்.

Advertisement