தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

முடிச்சூரில் ஆம்னி பேருந்து நிலையம்....கிளாம்பாக்கம் சர்வீஸ் சாலையில் பேருந்துகள் இயக்கப்படாது : அமைச்சர் சேகர்பாபு பேட்டி

சென்னை : கிளாம்பாக்கம் சர்வீஸ் சாலையில் பள்ளி நேரங்களில் பேருந்துகள் இயக்கப்படாது என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இன்று காலை அமைச்சர் சேகர் பாபு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கிளாம்பாக்கம் சர்வீஸ் சாலையில் இனி பேருந்துகள் இயக்கப்படாது. பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படாதவாறு பேருந்துகள் இயக்கப்படும்.ஆதிதிராவிடர் பள்ளியை வேறு இடத்திற்கு மாற்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பயணிகளுக்கு இடையூறாக உள்ள சுவரை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.
Advertisement

புதிய ஆம்னி பேருந்து நிலையம் முடிச்சூரில் கட்டப்படுகிறது. கிளாம்பாக்கத்தில் பயணிகளின் பாதுகாப்பிற்காக காவல் நிலையம் பொங்கலுக்குள் பயன்பாட்டிற்கு வரும்.ஓராண்டுக்குள் கிளாம்பாக்கம் ரயில் நிலைய பணிகள் நிறைவடையும். பொது மக்கள் சாலையை கடக்க நடை மேம்பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வாரந்தோறும் 2 நாட்கள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும். அதிமுக ஆட்சியில் கிளாம்பாக்கத்தில் 30% பணிகள் மட்டுமே நிறைவடைந்தன. மத்திய மந்திரி எல்.முருகன் பேருந்து நிலையைத்தை சுற்றிப் பார்த்து குறைகளை சொல்லலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

Related News