தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆம்னி பஸ்கள் நிறுத்த வசதியாக நெல்லை வண்ணார்பேட்டை சாலை விரிவாக்கம்

*டிஆர்ஓ சுகன்யா ஆய்வு

Advertisement

நெல்லை : 'தினகரன்' செய்தி எதிரொலியாக ஆம்னி பஸ்கள் நிறுத்த வசதியாக நெல்லை வண்ணார்பேட்டை சாலை விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதற்காக மாவட்ட வருவாய் அலுவலர் சுகன்யா அரசுத் துறை அதிகாரிகளுடன் கள ஆய்வு நடத்தினார்.

நெல்லையின் முக்கிய சந்திப்பாக வண்ணார்பேட்டை திகழ்கிறது. இதனால் ஜவுளிக் கடைகள், நகைக் கடைகள், ஓட்டல்கள், லாட்ஜ்கள் என வண்ணார்பேட்டையில் வணிக நிறுவனங்கள் பெருகி விட்டன. மேலும் நெல்லை புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து கோவில்பட்டி, மதுரை, திருச்சி, சென்னை செல்லும் அனைத்து வாகனங்களும் வண்ணார்பேட்டையை கடந்து தான் பயணிக்கின்றன.

இதே போல புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து தென்காசி, செங்கோட்டை செல்லும் பஸ்கள் வண்ணார்பேட்டை ரவுண்டானாவில் திரும்பி செல்கின்றன. நெல்லை மாநகர பஸ்கள் அனைத்தும் நெல்லை வண்ணார்பேட்டையில் நின்று பயணிகளை ஏற்றி, இறக்கிச் செல்கின்றன. இதற்காக ரவுண்டானாவின் 2 புறங்களிலும் விசாலமாக பஸ்கள் நிறுத்தும் வசதி உள்ளது.

ஆனால், கோவில்பட்டி, மதுரை, சென்னை செல்லும் அரசு பஸ்களும், தனியார் ஆம்னி பஸ்களும் நெல்லை வண்ணார்பேட்டை செல்லப்பாண்டியன் சிலை மேம்பாலம் இறக்கத்தில் ஒரே இடத்தில் நிற்கின்றன.

இதனால் இந்த இடத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இரவு நேரங்களில் இந்த பகுதியை கடந்து செல்வது தீராத தலைவலியாக உள்ளது. இதைத் தீர்க்க ஆம்னி பஸ்களை நிறுத்த தனி இடம் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று 'தினகரன்' நாளிதழில் தொடர்ந்து செய்திகள் வெளியானது.

இந்நிலையில், நெல்லை வண்ணார்பேட்டையில் நிலவி வரும் போக்குவரத்து நெருக்கடியை தீர்க்க கலெக்டர் சுகுமார் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். இது தொடர்பாக திங்கள் தோறும் நடக்கும் சாலை போக்குவரத்து கூட்டத்திலும் கலெக்டர் விவாதித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து நெல்லை மாவட்ட வருவாய் அலுவலர் சுகன்யா தலைமையில், ஆயுதப்படை உதவி போலீஸ் கமிஷனர் அசோக் குமார் மற்றும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், மின் வாரிய அதிகாரிகள் அடங்கிய குழுவினர் நேற்று வண்ணார்பேட்டை பகுதியில் ஆய்வு நடத்தினர்.

அதாவது, நெல்லை புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து வரும் ஆம்னி பஸ்கள் நெல்லை வண்ணார்பேட்டை செல்லப்பாண்டியன் சிலை மேம்பாலத்தில் இறங்கி இடது புறமாக நின்று செல்ல வசதியாக அந்தச் சாலை மேம்பாலம் இறங்கும் பகுதியில் இருந்து கனரா வங்கியை அடுத்து, பிரபல நகைக்கடை அருகே வண்ணார்பேட்டை சாலை திரும்பும் பகுதி வரை விரிவாக்கம் செய்யப்படுகிறது.

இதன் மூலம் மேம்பாலத்தில் இருந்து கோவில்பட்டி, மதுரை மார்க்கமாக செல்லும் அரசு பஸ்கள் தற்போது வண்ணார்பேட்டையில் உள்ள பஸ் ஸ்டாப்பில் பயணிகளை ஏற்றி, இறக்கிச் செல்லும்.

அதே நேரத்தில் ஆம்னி பஸ்கள் இடதுபுறம் திரும்பி வண்ணார்பேட்டை சாலை திரும்பும் பகுதி வரை இடது புறமாக நின்று பயணிகளை ஏற்றி, இறக்கிச் செல்ல வழிவகை செய்யப்படும். இதற்காக நடுவில் பேரிக்கார்டுகள் வைத்து சாலை இரண்டு பகுதிகளாக பிரிக்கப்படும். இதன் மூலம் வண்ணார்பேட்டை பகுதியில் பல ஆண்டுகளாக நிலவி வரும் போக்குவரத்து நெரிசல் முடிவுக்கு வரும் என தெரிகிறது.

Advertisement