ஓமந்தூரார் அரசு மருத்துவ கல்லூரியில் சீனியர் மாணவர்கள் ராகிங் செய்வதாக மாணவர்கள் புகார்
Advertisement
இதனையடுத்து, ஓமந்தூரார் அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் அரவிந்தன், ராகிங் சம்பவம் தொடர்பாக சீனியர் மாணவர்களிடம் விசாரணை நடத்தி அதற்கான அறிக்கையை அனுப்ப முடிவு செய்தார். ஆனால், இந்த விவகாரத்தில் காவல் துறை உதவியுடன் விசாரணையை முன்னெடுக்குமாறு ராகிங் தடுப்பு பிரிவு அறிவுறுத்தியது. அதனை தொடர்ந்து, அத்தகைய விசாரணை நடத்தப்பட்டது. அதன் அடிப்படையில் அறிக்கை தயாரிக்கப்பட்டு, ராகிங் தடுப்பு பிரிவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும், இதில் சம்பந்தப்பட்ட மாணவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
Advertisement