தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஓமந்தூரார் அரசு மருத்துவ கல்லூரியில் சீனியர் மாணவர்கள் ராகிங் செய்வதாக மாணவர்கள் புகார்

Advertisement

துரைப்பாக்கம்: சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவ கல்லூரியில் இளநிலை மருத்துவம் முதலாமாண்டு படிக்கும் மாணவன் ஒருவர், டெல்லியில் உள்ள ராகிங் தடுப்பு பிரிவில் கடந்த 26ம் தேதி ஆன்லைன் மூலம் புகார் அளித்தார். அதில், ஓமந்தூரார் அரசு மருத்துவ கல்லூரியை சேர்ந்த சீனியர் மாணவர்கள், தங்களை அவர்களுடைய `ரெக்கார்டு’ நோட்டுகளை எழுத வைத்தல், வகுப்பறைக்கு செல்ல விடாமல் தடுத்தல் உள்ளிட்ட ராகிங் செயல்களில் ஈடுபடுவதாக கூறியிருந்தார்கள். இதுதொடர்பாக ஓமந்தூரார் அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் விளக்கம் அளிக்க வேண்டும் என டெல்லியில் உள்ள ராகிங் தடுப்பு பிரிவு அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

இதனையடுத்து, ஓமந்தூரார் அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் அரவிந்தன், ராகிங் சம்பவம் தொடர்பாக சீனியர் மாணவர்களிடம் விசாரணை நடத்தி அதற்கான அறிக்கையை அனுப்ப முடிவு செய்தார். ஆனால், இந்த விவகாரத்தில் காவல் துறை உதவியுடன் விசாரணையை முன்னெடுக்குமாறு ராகிங் தடுப்பு பிரிவு அறிவுறுத்தியது. அதனை தொடர்ந்து, அத்தகைய விசாரணை நடத்தப்பட்டது. அதன் அடிப்படையில் அறிக்கை தயாரிக்கப்பட்டு, ராகிங் தடுப்பு பிரிவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும், இதில் சம்பந்தப்பட்ட மாணவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

Advertisement