தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஓமலூர் அருகே சூறாவளி காற்றில் வாழை மரங்கள் சாய்ந்து சேதம்: விவசாயிகள் வேதனை

ஓமலூர்: ஓமலூர் அருகே நேற்று முன்தினம் பெய்த மழையின் போது வீசிய சூறாவளி காற்றுக்கு வாழை மரங்கள் சாந்து சேதமானதால், உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சேலம் மாவட்டம் ஓமலுர் வட்டார பகுதிகளில் கடந்த சில மாதங்களாக பெய்த மழையை தொடர்ந்து, விவசாய பணிகள் நடைபெற்று வருகிறது. நெல், வாழை, மஞ்சள், கரும்பு, மரவள்ளி உள்ளிட்ட பயிர்கள் அதிக அளவில் சாகுபடி செய்துள்ளனர்.
Advertisement

கடந்தாண்டு பெய்த மழையால் கிணறுகளில் தண்ணீர் உள்ளதால், நீராதாரம் உள்ள பகுதிகளில் விவசாயிகள் வாழையை அதிகமாக சாகுபடி செய்துள்ளனர். கோட்டமேட்டுப்பட்டி கிராமத்தில் மொந்தன், பூவன், ரஷ்தாளி, பச்சை வாழை, செவ்வாழை உள்ளிட்ட ரகங்களை நடவு செய்து பராமரித்து வருகின்றனர். இந்த வாழை மரங்களில், பூ மற்றும் வாழை தார் பிடித்துள்ளது. இந்நிலையில் ஓமலூர் வட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு பெய்த மழையின் போது பலத்த காற்று வீசியது.

இந்த காற்றுக்கு கோட்டமேட்டுப்பட்டி கிராமம் பருப்பு மில் பகுதியை சேர்ந்த விவசாயி சின்னசாமி என்பவரின் தோட்டத்தில் இருந்த, 250 வாழை மரங்கள் முழுமையாக உடைந்து விழுந்து சேதமடைந்துள்ளன. இதில், வாழை பூ மற்றும் வாழை பிஞ்சு, வாழை காய்களுடன் கூடிய 100க்கும் மேற்பட்ட மரங்கள் சாந்தது. இதேபோல மேலும், சில இடங்களில் வாழை குழையுடன் மரங்கள் சாய்ந்து, வாழை விவசாயிகளுக்கு பெருமளவில் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனால், வாழை பயிரிட்ட விவசாயிகள் என்ன செய்வதென்றே தெரியாமல் வேதனையில் உள்ளனர். ஒரு ஏக்கருக்கு சுமார் ₹1.5 லட்சம் வரை செலவு செய்து பயிரிட்டுள்ளனர். அனைத்தும், சாய்ந்து சேதமானதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். மேலும், காற்றுக்கு சேதமடைந்த வாழை மரங்களுக்கு, தமிழக அரசு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதனை தொடர்ந்து தோட்டக்கலை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட தோட்டங்களை ஆய்வு செய்து இழப்பு குறித்து கணக்கெடுத்து வருகின்றனர்.

Advertisement

Related News