தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஓம் காளி, ஜெய் காளி கோஷத்துடன் குலசையில் இன்று நள்ளிரவு மகிஷா சூரசம்ஹாரம்: லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்

தூத்துக்குடி: ஓம் காளி, ஜெய் காளி கோஷத்துடன் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மகிஷா சூரசம்ஹாரம் இன்று (வியாழன்) நள்ளிரவு நடக்கிறது. உலக புகழ் பெற்ற தசரா திருவிழா நடைபெறும் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோயிலில் 1ம் திருவிழா செப்டம்பர் 23ம்தேதி முதல் 9ம் திருவிழா அக்டோபர் 1ம்தேதி வரை தினசரி இரவு 10 மணிக்கு அன்னை முத்தாரம்மன் சிம்ம வாகனத்தில் துர்க்கை திருக்கோலம், கற்பக விருட்சம் வாகனத்தில் விசுவகர்மேசுவரர் திருக்கோலம், ரிசபம் வாகனத்தில் பார்வதி திருக்கோலம், மயில் வாகனத்தில் பாலசுப்பிரமணியர் திருக்கோலம், காமதேனு வாகனத்தில் நவநீத கிருஷ்ணர் திருக்கோலம், சிம்ம வாகனத்தில் மகிசாசுரமர்த்தினி திருக்கோலம், பூஞ்சப்பரத்தில் ஆனந்த நடராஜர் திருக்கோலம், கமல வாகனத்தில் கஜலெட்சுமி திருக்கோலம், அன்ன வாகனத்தில் கலைமகள் திருக்கோலம் என திருவீதியுலா நடந்தது.

Advertisement

10ம் திருவிழாவான இன்று 2ம்தேதி காலை 6 மணி, காலை 7.30 மணி, காலை 9 மணி, காலை 10.30 மணிக்கு சிறப்பு அபிஷேகம், இரவு 11 மணிக்கு அன்னை முத்தாரம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜையும் தொடர்ந்து நள்ளிரவு 12 மணிக்கு அன்னை சிம்ம வாகனத்தில் கடற்கரை சிதம்பரேசுவரர் கோயிலுக்கு முன்பாக எழுந்தருளி லட்சகணக்கான பக்தர்கள் முன்னிலையில், ஓம் காளி, ஜெய் காளி கோஷத்துடன் மகிஷா சூரனை சம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது. இதையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் சூரசம்ஹாரம் நிகழ்ச்சியை காண குலசேகரன்பட்டினத்தில் குவிந்து வருகின்றனர்.

Advertisement

Related News