தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

போதை ஆசாமிகள் தகராறில் சாலையில் நடந்து சென்ற முதியவர் வெட்டி கொலை

மாதவரம்: மாதவரம் பர்மா காலனியை சேர்ந்த நண்பர்களான பாக்யராஜ் (27), மார்ட்டின் (28), சந்தானம் (26) ஆகிய மூவரும், நேற்று முன்தினம் இரவு, அருள் நகர் அருகே உள்ள டாஸ்மாக் கடைக்கு பைக்கில் சென்றுள்ளனர். அப்போது, அங்கு வந்த கொடுங்கையூர் அம்பேத்கர் நகரை சேர்ந்த ஜெரோம் (26) என்பவர் மீது இவர்களது பைக் மோதியது. இதனால், அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் சமாதானம் செய்து வைத்ததால், கலைந்து சென்றனர். பின்னர் டாஸ்மாக் பாரில், பாக்யராஜ் மற்றும் அவரது நண்பர்கள் ஒரு டேபிளில் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தனர்.

Advertisement

இவர்களுக்கு அருகில் ஜெரோம் மற்றொரு டேபிளில் அமர்ந்து மது அருந்தியுள்ளார். போதையில், இருதரப்புக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது, ஜெரோம் மறைத்து வைத்திருந்த அரிவாளால், பாக்கியராஜ் உள்ளிட்ட மூவரையும் வெட்டியுள்ளார். இதனால், அவர்கள் பாரில் இருந்து வெளியே ஓடினர். அவர்களை விடாமல் ஜெரோம் விரட்டிச் சென்றுள்ளார். அப்போது, அவ்வழியாக சென்ற ஆட்டோவை மடக்கி, மூவரும் தப்பினர். இதனால், ஆத்திரமடைந்த ஜெரோம், அவ்வழியாக நடந்து சென்ற ரமேஷ் (60) என்பவரை திடீரென வழிமறித்து அரிவாளால் வெட்டிவிட்டு தப்பினார்.

தகவலறிந்து வந்த மாதவரம் போலீசார், படுகாயமடைந்த ரமேஷை மீட்டு, மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் இறந்தது தெரிந்தது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, ஜெரோமை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement