தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

ஒடிசா, பஞ்சாப், ஆந்திராவில் 4 செமிகண்டக்டர் சிப் ஆலைகளுக்கு அனுமதி: ஒன்றிய அமைச்சரவை முடிவு

புதுடெல்லி: ஒடிசா, பஞ்சாப், ஆந்திராவில் ரூ.4,594 கோடி முதலீட்டில் 4 செமிகண்டக்டர் சிப் உற்பத்தி ஆலைகளுக்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் மோடி தலைமையில் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில், ஒடிசா, பஞ்சாப், ஆந்திராவில் ரூ.4,594 கோடி முதலீட்டில் செமிகண்டக்டர் சிப் தயாரிக்கும் 4 திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இது குறித்து கூட்டத்திற்கு பின் பேட்டி அளித்த ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில், ‘‘ஒடிசா, பஞ்சாப், ஆந்திராவில் அமைக்கப்படும் 4 செமிகண்டக்டர் உற்பத்தி ஆலைகளுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ரூ.76 ஆயிரம் கோடி மதிப்பிலான அரசின் செமிகண்டக்டர் நிதி உதவி திட்டத்தின் கீழ் இந்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது’’ என்றார்.

மின்னணு சாதனங்களின் உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கும் செமிகண்டக்டர் எனும் மூலப்பொருளை உள்நாட்டிலேயே தயாரிக்க ஒன்றிய அரசு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. மேலும், உத்தரப்பிரதேசத்தில் லக்னோ மெட்ரோ ரயில் திட்டத்தின் 11.165 கி.மீ தொலைவிலான 1பி கட்டத்திற்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் திட்டமதிப்பீடு ரூ.5,801 கோடி. இதே போல அருணாச்சல பிரதேசத்தில் ஷி யோமி மாவட்டத்தில் ரூ.8,146.21 கோடி செலவில் 700 மெகாவாட் மின் உற்பத்திக்கான டாடோ-2 நீர் மின் நிலையம் கட்ட அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.