தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் ரூ.8,308 கோடியில் 6 வழிச்சாலை அமைக்க ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்!

ஒடிசா: ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் ரூ.8,308 கோடியில் 6 வழிச் சாலை அமைக்க ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. 110.9 கி.மீ. நீளத்தில் முக்கிய நகரங்கள், துறைமுகங்களை இணைக்கும் வகையில் சாலை அமைக்கப்பட உள்ளது.

Advertisement

ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் புறவழிச் சாலையில் ராமேஸ்வர் முதல் தாங்கி வரை உள்ள தேசிய நெடுஞ்சாலையில் 110.87 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஆறு வழிச் சாலை அமைக்க பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலதனச் செலவு மொத்தம் ரூ.8307.74 கோடி ஆகும்.

இந்த ஆறு வழிச்சாலை மிகவும் நகரமயமாக்கப்பட்ட கோர்தா, புவனேஸ்வர், கட்டாக் வழியாக அமைக்கப்படும். இந்த திட்டம் நிறைவேறும் போது ஒடிசாவுக்கும் இதர கிழக்குப் பகுதி மாநிலங்களுக்கும் குறிப்பிடத்தக்க பயனளிப்பதாக இருக்கும். அதிகப்படியான வர்த்தகப் போக்குவரத்தை மாற்றியமைப்பதன் மூலம் சரக்குகள் விரைவாக உரிய இடத்திற்கு சென்று சேர்வதற்கு பயன்படும் என்பதோடு போக்குவரத்து செலவைக் குறைக்கும் இந்த பிராந்தியத்தில் சமூக பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும்.

இந்த புறவழிச்சாலை பணிகள் நிறைவடையும்போது முக்கியமான சமயத் தலங்களுக்கு இடையே போக்குவரத்து தொடர்பு வலுப்படுவதோடு பொருளாதார மையங்களோடும் இணைப்பு ஏற்படும். வர்த்தகம் மற்றும் தொழில்துறை மேம்பாட்டிற்கு புதிய வழிகள் திறக்கப்படும். இந்த திட்டத்தின் மூலம் நேரடியாக 74.43 லட்சம் மனித வேலை நாட்களும் மறைமுகமாக 93.04 லட்சம் மனித வேலை நாட்களும் உருவாகும்.

Advertisement

Related News