தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

ஒடிசாவில் நடந்த மக்களவை, சட்டமன்ற தேர்தல்களில் பெரும் முறைகேடு: பிஜு ஜனதா தளம் கட்சி பரபரப்பு குற்றச்சாட்டு

ஒடிசா:ஒடிசாவில் நடந்த மக்களவை, சட்டமன்ற தேர்தல்களில் பெரும் முறைகேடு நடந்துள்ளதாக பிஜு ஜனதா தளம் கட்சி பரபரப்பு குற்றச்சாட்டு வைத்துள்ளது.

ஒடிசாவில் மக்களவை தேர்தலில் பெரும் முறைகேடு-பி.ஜே.டி

ஒடிசாவில் 21 நாடாளுமன்ற தொகுதிகளில் எந்திரத்தில் பதிவான வாக்குகளை விட அதிக வாக்குகள் எண்ணப்பட்டுள்ளதாக புகார் தெரிவித்தது. புல்பானி மக்களவை தொகுதியில் ஒரு வாக்குச்சாவடியில் மட்டும் 682 வாக்குகள் கூடுதலாக எண்ணப்பட்டுள்ளன.

ஒரே தொகுதியில் மக்களவை, சட்டமன்ற வாக்குப்பதிவில் வித்தியாசம்

தால்சரா சட்டமன்ற தொகுதியில் ஒரு வாக்குச்சாவடியில் 660 கூடுதல் வாக்கும் மற்றொரு சாவடியில் 784 கூடுதல் வாக்குகளும் எண்ணப்பட்டுள்ளன. ஒரு மக்களவை தொகுதியில் பதிவான வாக்குகளுக்கும் அந்த தொகுதிக்குட்பட்ட சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குக்கும் வேறுபாடு உள்ளது. பாஜக சுமார் 2000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற தென்கானல் தொகுதியில் 4056 வாக்குகள் கூடுதலாக எண்ணப்பட்டுள்ளன.

தேர்தல் முறைகேடு - வழக்கு தொடர பிஜேடி முடிவு

கந்தமால், போலன்கிர், ஜாஜ்பூர் தொகுதிகளிலும் பதிவான வாக்குக்கும் எண்ணப்பட்ட வாக்குக்கும் வித்தியாசம் உள்ளது. தேர்தல் ஆணைய தகவல்களை விரிவாக ஆய்வுசெய்ததில் முறைகேடு தெரிய வந்திருப்பதாக பிஜு ஜனதா தளம் குற்றச்சாட்டு வைத்துள்ளது. ஒடிசாவில் வாக்குப்பதிவு முடிந்த பிறகு 50% சட்டமன்ற தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.

தேர்தல் முடிந்த பிறகு ஒரு தொகுதியில் 30% வாக்கு சதவீதம் உயர்வு

பல தொகுதிகளில் தேர்தல் முடிந்த பிறகு 30 சதவீதம் வரை கூடுதல் வாக்குகள் பதிவாகி இருப்பதாக குற்றச்சாட்டு. தேர்தல் முறைகேடுகள் | தொடர்பாக ஆணையத்தில் பல முறை முறையிட்டும் நடவடிக்கை இல்லை. தேர்தல் முறைகேடு தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போவதாக பிஜு ஜனதா தளம் எச்சரிக்கை விடுத்தது.

 

Related News