தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அக். 2ம் தேதி காந்தி ஜெயந்தியன்று; ‘ஜன் சுராஜ்’ அமைப்பை கட்சியாக்கும் பிரசாந்த் கிஷோர்: 2025 பீகார் தேர்தலில் போட்டி

பாட்னா: மகாத்மா காந்தி பிறந்த நாளான வரும் அக்டோபம் 2ம் தேதி ‘ஜன் சுராஜ்’ (மக்களின் நல்லாட்சி) என்ற பெயரில் கட்சி தொடங்க உள்ளதாக தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் அறிவித்தார். பீகாரை சேர்ந்த தேர்தல் வியூக அமைப்பாளர் பிரசாந்த் கிஷோர், அரசியல் மற்றும் தேர்தல் தொடர்பான வியூகம் குறித்து அரசியல் கட்சிகளுக்கு ஆலோசனைகளை வழங்கி வந்தார். இவர் கடந்த 2021ம் ஆண்டு மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பின்னர், தேர்தல் உத்தி வகுப்புப் பணியைக் கைவிட்டார். பின்னர் 2022ம் ஆண்டு ‘ஜன் சுராஜ்’ (மக்களின் நல்லாட்சி) என்ற பெயரில் அமைப்பை தொடங்கி பல இடங்களில் பிரசாரம் மேற்கொண்டார்.
Advertisement

அதற்காக பீகார் முழுவதும் நடைப்பயணம் மேற்கொண்டார். இந்நிலையில், நேற்று பாட்னாவில் ‘ஜன் சுராஜ்’ பரப்புரையின் மாநில அளவிலான பயிலரங்கு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பிரசாந்த் கிஷோா் பேசுகையில், ‘ஏற்கெனவே நான் கூறியதுபோல வருகிற அக்டோபர் 2ம் தேதி (மகாத்மா காந்தி பிறந்த நாள்) ‘ஜன் சுராஜ்’ என்ற பெயரில் கட்சி தொடங்க உள்ளேன். அடுத்த ஆண்டு பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் ‘ஜன் சுராஜ்’ கட்சி போட்டியிடும். கட்சியின் தலைவர் யார் போன்ற பிற விவரங்கள் உரிய நேரத்தில் அறிவிக்கப்படும்’ என்றார். நேற்று நடந்த பயிலரங்கில் பீகார் முன்னாள் முதல்வரும், ‘பாரத ரத்னா’ விருது பெற்றவருமான கர்பூரி தாக்கூரின் பேத்தி ஜக்ரிதி தாக்கூர் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Advertisement

Related News