தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருக்கார்த்திகை தீபத்திருவிழா முன்னிட்டு அகல் விளக்குகள் தயாரிப்பு பணி தீவிரம்

கீழ்பென்னாத்தூர் : திருவண்ணாமலை மாவட்டத்தில் கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு அகல் விளக்குகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் முக்கிய திருவிழாவான திருக்கார்த்திகை தீபத்திருவிழா வரும் 3ம் தேதி நடைபெற உள்ளது.

Advertisement

கார்த்திகை தீபத்திருநாளில் மக்கள் தங்களது வீடுகளில் விளக்கேற்றி வழிபடுவது வழக்கம். அவ்வாறு ஏற்றப்படும் தீபத்தின் மூலம் அண்ணாமலையார் வீடுகளில் எழுந்தருளி அருள்பாலிப்பார் என்பது ஆன்மிக நம்பிக்கை.

இந்நிலையில், திருக்கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அகல் விளக்குகள் தயாரிக்கும் பணியில் மண்பாண்ட தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.அதன்படி, திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னத்தூர் வட்டம், வேளானந்தல் கிராமத்தில் அகல் விளக்கு தயாரிக்கும் பணியில் மண்பாண்ட தொழிலாளர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

தீபத்திருவிழாவுக்கு இன்னும் சில நாட்கள் இருக்கும் நிலையில் மண்பாண்ட தொழிலாளர்கள் மண்ணை பிசைந்து பதப்படுத்தி அகல் விளக்குகள் செய்து வருகின்றனர். தற்போது மழை இல்லாத காரணத்தினால் அகல் விளக்குகள் உற்பத்தியில் ஈடுபட்டு வருவதாகவும், மழை வந்தால் விளக்குகள் உற்பத்தி செய்யும் பணி பாதிப்படையும் என்பதால் முன்னதாகவே தயாரித்து வெயிலில் காய வைத்து பாதுகாத்து வைப்பதாகவும் மண்பாண்ட தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

நவீன கால வளர்ச்சி காரணமாக அச்சு விளக்குகள், பிளாஸ்டிக் விளக்குகள், பீங்கான் விளக்குகள் வந்தாலும், தங்களது வாழ்வாதாரத்துக்காக அகல் விளக்குகளை தயாரிக்கும் பணியில் மண்பாண்ட தொழிலாளர்கள் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Related News