தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ராஜஸ்தானில் பயங்கரம் நர்சிங் மாணவியை பலாத்காரம் செய்து கழுத்தறுத்து கொலை: ஒருவர் கைது

ஜெய்பூர்: ராஜஸ்தானில் செவிலியர் மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராஜஸ்தான் மாநிலம் கைர்தல் திஜாரா மாவட்டத்தில் முண்டவார் காவல் நிலையத்துக்கு முன் உள்ள குடியிருப்பு கட்டிடத்தில் வாடகை வீட்டில் செவிலியர் மாணவி(20 வயது) ஒருவர் தங்கி இருந்தார். நேற்று முன்தினம் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில் அந்த மாணவியின் உடல் வீட்டில் இருந்து மீட்கப்பட்டது. இதுதொடர்பாக அந்த மாணவியின் தந்தை, எனது மகள் கடத்தப்பட்டு, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என முண்டவார் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

Advertisement

அதனடிப்படையில், அரியானா மாநிலம் மகேந்தர்கரை சேர்ந்த உபேந்திர குமார்(21) என்பவரை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், “கைது செய்யப்பட்ட உபேந்திர குமார் அந்த மாணவியுடன் அதே வீட்டில் தங்கி இருந்தார். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது” என்றனர். இந்த சம்பவம் குறித்து ராஜஸ்தான் எதிர்க்கட்சி தலைவர் திகாராம் ஜூலி, “ராஜஸ்தானில் பெண்கள் மிகவும் பாதுகாப்பற்றவர்களாக இருக்கிறார்கள். இதுபோன்ற குற்றங்களை தடுக்காமல் பாஜ கண்களையும், காதுகளையும் மூடிக்கொண்டுள்ளது” என குற்றம்சாட்டி உள்ளார்.

Advertisement