தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஜோசப் பள்ளி என்எஸ்எஸ் மாணவர்கள் சார்பில் கூட்டப்புளி பாமணி குளத்துக்கரையில் 3 ஆயிரம் பனை விதைகள் நடும்விழா

நெல்லை : கூட்டப்புளி புனித ஜோசப் பள்ளி என்எஸ்எஸ் முகாமில் பங்கேற்ற மாணவர்கள் பாமணி குளத்துக்கரையில் 3 ஆயிரம் பனை விதைகளை நட்டினர்.

Advertisement

நெல்லை மாவட்டம் கூட்டப்புளியில் புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளி சார்பில் 2025-26ம் கல்வி ஆண்டிற்கான நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் நடந்தது. என்.எஸ்.எஸ் திட்ட அலுவலர் மற்றும் ஆசிரியர்கள் ஆரோக்கியதாஸ், இணை அலுவலர் ஆரோக்கிய சோரப் ஆகியோர் தலைமை வகித்தனர். முகாமை தலைமை ஆசிரியர் ஜான் ரூபின் குமார் சிறப்புரை ஆற்றி துவக்கிவைத்தார்.

இதையொட்டி ஆசிரியர்களும், என்எஸ்எஸ் மாணவர்களும் இணைந்து பூவரசு மரக்கன்றுகள் நட்டினர். மேலும் சங்கனாபுரம் கால்நடை மருத்துவமனை வளாகத்தை தூய்மை செய்தல், குடிநீர் இணைப்பிற்கான குழி தோண்டும் பணி மற்றும் பனை விதைகள் சேகரிப்பு உள்ளிட்ட போன்ற பல்வேறு பணிகளில் ஈடுபட்டனர்.

அத்துடன் பெரியகுளம் அரசு துவக்கப்பள்ளியைச் சுற்றியுள்ள பகுதிகளை தூய்மை செய்யும் பணி மற்றும் ஜெயமாதபுரம் அரசு தொடக்கப் பள்ளி, கோயில் வளாகத்தில் தூய்மை இயக்க திட்டப்பணிகளில் ஈடுபட்டனர். ஜெயமாதபுரத்தில் போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி, டிஜிட்டல் இலவச கண் மருத்துவ முகாம் நடந்தது.

இதைத்தொடர்ந்து பாமணி குளத்துக்கரையில் சுற்றுச்சூழலை காப்போம் பசுமையை உருவாக்குவோம் என்ற நோக்கில் 3 ஆயிரம் பனை விதைகள் என்.எஸ்.எஸ் மாணவர்களால் நட்டனர். ஜெயமாதபுரத்தில் இலவச கால்நடை மருத்துவ முகாம் நடந்தது.

இதில் பசுமையை உருவாக்கும் என்ற தலைப்பில் என்.எஸ்.எஸ் மாணவர்கள், ஆசிரியர்கள் சிறப்புரை ஆற்றினர். சங்கனாபுரத்தில் தூய்மையை சேவை என்ற நோக்கில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் வளாகத்தை தூய்மை செய்து மரக்கன்றுகள் நடும் பணி நடந்தது. இதில் தூய்மையே சேவை என்பது குறித்து டாக்டர் கார்த்திக் பேசினார்.

Advertisement

Related News