தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மகாராஷ்டிரா மாநிலத்திற்கு நவ. 2வது வாரத்தில் பேரவை தேர்தல்: முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கணிப்பு

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்திற்கு நவ. 2வது வாரத்தில் பேரவை தேர்தல் நடக்க வாய்ப்புள்ளதாக முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கூறினார். மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தலுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. மாநிலத்தில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, பாஜக மற்றும் தேசியவாத காங்கிரஸ் (என்சிபி) கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மும்பையில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அளித்த பேட்டியில், ‘மகாராஷ்டிர மாநில சட்டசபைக்கு நவம்பர் இரண்டாவது வாரத்தில் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது. அடுத்த 8 முதல் 10 நாட்களில் ஆளும் கூட்டணி கட்சிகளுக்கு இடையேயான தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்படும்.
Advertisement

288 உறுப்பினர்களைக் கொண்ட மாநில சட்டசபைக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்துவது நல்லது. எங்களது அரசு வளர்ச்சி மற்றும் நலத்திட்டங்களில் கவனம் செலுத்தி வருகிறது. பெண்கள் மத்தியில் எங்களது அரசுக்கு ஆதரவு இருக்கிறது. திறன் பயிற்சி திட்டத்தின் கீழ், 1.5 லட்சம் இளைஞர்களுக்கு பணி நியமன கடிதம் வழங்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு ரூ.6,000 முதல் ரூ.10,000 வரை உதவித்தொகை வழங்கப்படும். அரசின் ‘லட்கி பஹின் யோஜனா’ திட்டத்தின் கீழ் இதுவரை 1.6 கோடி பெண்கள் நிதியுதவி பெற்றுள்ளனர். 2.5 கோடி பெண்களுக்கு இத்திட்டத்தை கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளோம்’ என்றார்.

 

Advertisement

Related News