தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நாகேந்திரனின் இறுதி சடங்கில் பங்கேற்க வந்த பிரபல ரவுடி வெள்ளை பிரகாஷ் துப்பாக்கி முனையில் கைது

 

Advertisement

பெரம்பூர்: பிரபல ரவுடி நாகேந்திரன் இறுதி ஊர்வலம் நேற்று நடந்தது. இதில், அவரது ஆதரவாளர்கள் மற்றும் பிரபல ரவுடிகள் கலந்து கொள்வார்கள் என்று உளவுத்துறை எச்சரித்திருந்த நிலையில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இந்த நிலையில், நாகேந்திரனின் வலதுகரமாக இருந்தவரும், அவர் சொல்லும் கொலைகளை உடனடியாக செய்து முடித்தவருமான பிரகாஷ் (எ) வெள்ளை பிரகாஷ் என்பவர் விழுப்புரம் பகுதியில் தங்கி, பல்வேறு திரைமறைவு வேலைகளை செய்து வந்தார். இவர் மீது கிறிஷ்டா கொலை வழக்கு, கூட்ஸ் ஷெட் பகுதியில் பாளையம் என்பவரை கொலை செய்த வழக்கு, பகுஜன் சமாஜ் கட்சி மாவட்ட செயலாளர் தென்னரசு கொலை செய்த வழக்கு உள்ளிட்ட 3 கொலை வழக்குகள் உள்பட 40க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் உள்ளன. இவர், நாகேந்திரன் உடலுக்கு அஞ்சலி செலுத்த வரப்போவதாக கொடுங்கையூர் இன்ஸ்பெக்டர் சரவணனுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் தீவிரமாக கண்காணித்து கொடுங்கையூர் பார்வதி நகர் பகுதியில் பதுங்கியிருந்த வெள்ளை பிரகாஷை (44) சுற்றிவளைத்து, துப்பாக்கி முனையில் கைது செய்தனர். அவரிடம் இருந்து 21 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

விசாரணையில், நாகேந்திரனின் இறுதி சடங்கிற்கு வரும் ரவுடிகளுக்கு கொடுப்பதற்காக கஞ்சா கொண்டு வந்ததாகவும், தனது குருநாதருக்கு அஞ்சலி செலுத்த வந்தேன்’ என்றும் வெள்ளை பிரகாஷ் வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து வெள்ளை பிரகாஷை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கடந்த 2022ம் ஆண்டு கொடுங்கையூர் குப்பைமேடு பகுதியில் காரில் வந்த வெள்ளை பிரகாஷிடம் இருந்து 40 நாட்டு வெடிகுண்டுகள், 40 அரிவாள்கள், 4 கத்திகள் மற்றும் ஒரு துப்பாக்கி ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். அப்போது போலீசாரிடம் இருந்து தப்பித்தபோது வெள்ளை பிரகாசுக்கு கால் உடைந்தது. அந்த வழக்கில் அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இதன்பிறகு ஜாமீனில் வெளியே வந்த பிரகாஷ் 2 முறை சிறைக்கு சென்று தொடர்ந்து தலைமறைவாக இருந்துள்ளார். தற்போது குருநாதருக்கு அஞ்சலி செலுத்த வந்தபோது போலீசார் கைது செய்துள்ளனர்.

 

Advertisement