தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

நடத்தை விதிமுறைகளை மீறிய 3 திருப்பதி தேவஸ்தான ஊழியர்களுக்கு நோட்டீஸ்

 

திருமலை: திருப்பதி தேவஸ்தானத்தில் பணிபுரிந்து கொண்டு, விதிமுறைகளை மீறிய 3 ஊழியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் உதவியாளராக பணிபுரிந்து வருபவர் கே.ராமு. இவர் தேவஸ்தான பணியில் இருந்து கொண்டு அரசியல் பிரமுகர்களுடன் வணிகம் செய்து பெரும் நிதி பரிவர்த்தனைகளை மேற்கொண்டு வந்துள்ளார்.

அதேபோல் தேவஸ்தானத்தில் அலுவலக துணை அதிகாரியாக உள்ள என்.சங்கரா, தனது குடியிருப்புகளை தனியாருக்கு வழங்கி பெரும் வங்கி பரிவர்த்தனைகளை செய்துள்ளார். அதேபோல் பணி நேரத்தில் அரசியல் பிரமுகர்களுக்கு, ஜூனியர் உதவியாளர் சீரலாகிரண் என்பவர் சேவை செய்து வந்துள்ளார். இந்த 3 ஊழியர்களும் தேவஸ்தான விதிகளை மீறியதால், அவர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. தேவஸ்தானத்தில் பணி புரியும் ஊழியர்கள் நடத்தை விதிகளை மீறி, தேவஸ்தான நற்பெயருக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் நடந்துகொண்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.