தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

இரட்டை வாக்காளர் சர்ச்சை; பீகார் துணை முதல்வருக்கு நோட்டீஸ்: 14க்குள் பதிலளிக்க தேர்தல் கமிஷன் உத்தரவு

பாட்னா: இரண்டு தொகுதிகளில் வாக்காளராகப் பதிவுசெய்துள்ளதாக பீகார் துணை முதல்வர் மீது எழுந்த புகாரைத் தொடர்ந்து, தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டு அறிவிப்பாணை அனுப்பியுள்ளது. பீகார் மாநில துணை முதல்வரும், பாஜகவின் மூத்த தலைவருமான விஜய் குமார் சின்ஹாவுக்கு இரண்டு வாக்காளர் அடையாள அட்டைகள் இருப்பதாகவும், அவர் லக்கிசராய் மற்றும் பாட்னாவில் உள்ள பாங்கிபூர் ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகளில் வாக்காளராகப் பதிவு செய்துள்ளதாகவும் முன்னாள் துணை முதல்வரும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவருமான தேஜஸ்வி யாதவ் குற்றம் சாட்டினார். மேலும் இரண்டு சட்டமன்ற தொகுதியில் தனது பெயரை பதிவு செய்துள்ள துணை முதல்வர் விஜய் குமார் சின்ஹா பதவி விலக வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இதனைத் தொடர்ந்து, பீகார் காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் குமார், தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் சின்ஹா இரு தொகுதிகளிலும் வாக்காளராக இருப்பதற்கான வரைவு வாக்காளர் பட்டியலின் மாதிரியை பகிர்ந்திருந்தார். இதற்கு பதிலடி கொடுத்த பாஜகவின் மூத்த தலைவர் ஜெகதாம்பிகா பால், தேஜஸ்வி யாதவும் இரண்டு இடங்களில் வாக்காளராகப் பதிவு செய்துள்ளார் என்று அவரது மாதிரியை சமூக வலைதளத்தில் வெளியிட்டார். இந்த அரசியல் மோதல்கள் வலுத்த நிலையில், பாங்கிபூர் சட்டமன்றத் தொகுதியின் தேர்தல் பதிவு அதிகாரி, துணை முதல்வர் விஜய் குமார் சின்ஹாவுக்கு தற்போதுள்ள வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

அதில், இரண்டு வெவ்வேறு சட்டமன்றத் தொகுதிகளின் வாக்காளர் பட்டியலில் அவரது பெயர் இடம்பெற்றதற்கான விளக்கத்தை வரும் 14ம் தேதி மாலை 5 மணிக்குள் அளிக்குமாறு கோரப்பட்டுள்ளது. இதற்கு பதிலளித்த விஜய் குமார் சின்ஹா, ‘நான் ஒரு இடத்தில் மட்டுமே வாக்களிக்கிறேன். தேஜஸ்வி யாதவ் தவறான தகவல்களைக் கொடுத்து மக்களைத் தவறாக வழிநடத்த முயற்சிக்கிறார். கடந்த ஏப்ரல் மாதம்தான், பாங்கிபூர் தொகுதியிலிருந்து எனது பெயரை நீக்கி, லக்கிசராய் தொகுதியில் சேர்க்க விண்ணப்பித்தேன். ஆனால், சில காரணங்களால் பாங்கிபூரிலிருந்து என் பெயர் நீக்கப்படவில்லை’ என்று விளக்கமளித்தார்.