தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

புகைப்பிடிக்க தனி இடம் இல்லை என புகார் விராட் கோஹ்லியின் பப் உணவகம் மீது வழக்கு: பெங்களூரு காவல் துறை அதிரடி

பெங்களூரு: புகைப்பிடிக்கக தனி இடம் ஒதுக்கவில்லை என்ற புகாரின் அடிப்படையில் விராட் கோஹ்லியின் பப் உணவகம் மீது பெங்களூரு காவல் துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு சொந்தமான ஒன்எய்ட் கம்யூன் என்ற பப்-உணவகம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் மேற்கண்ட பப்-உணவகத்திற்கு எதிராக கர்நாடக காவல்துறை, புகையிலை தடுப்புச் சட்டத்தின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது. இந்த பப்-உணவகத்தில் புகைப்பிடிப்பதற்கு தனி இடம் ஒதுக்கப்படவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

முன்னதாக பெங்களூரு காவல்துறை சார்பில், உணவகங்கள், ஓட்டல்கள், விமான நிலையங்கள் போன்ற பொது இடங்களில் புகைப்பிடிப்பு விதிகளை பரிசோதிக்க திடீர் ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வின் போது விராட் கோலியின் பப் உணவகத்தில் புகைப்பிடிப்பவர்களுக்கு என்று தனியாக இடம் ஒதுக்கப்படவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்தது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, கர்நாடக அரசு பெங்களூருவில் ஹூக்கா பார்களுக்கு தடை விதித்தது. மேலும், புகையிலை பொருட்கள் வாங்குவதற்கான சட்டப்பூர்வ வயது 18லிருந்து 21 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

கடந்த 2024ம் ஆண்டு கர்நாடகாவின் புகையிலை பொருட்கள் தடை மற்றும் ஒழுங்குமுறைச் சட்ட திருத்தத்திற்கு குடியரசுத் தலைவர் முர்மு சமீபத்தில் ஒப்புதல் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. விராட் கோஹ்லியின் பப்-உணவகத்துக்கு எதிராக ஏற்கனவே 2024 ஜூனில், அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு மீறி இயங்கியதற்காக வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதே ஆண்டு டிசம்பரில், தீ பாதுகாப்பு விதிகளை மீறியதாகவும், தீ பாதுகாப்பு சான்றிதழ்கள் இல்லாததற்காகவும் பெங்களூரு மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.

 

Related News