தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வட கொரியாவுக்கு எதிராக எல்லையில் ஒலிபெருக்கி பிரசாரம்: மீண்டும் தொடங்குவதாக தென் கொரியா அறிவிப்பு

சியோல்: வட கொரியாவுக்கு எதிராக எல்லையில் ஒலிபெருக்கி பிரசாரம் மீண்டும் தொடங்கப்படும் என்று தென் கொரியா அறிவித்துள்ளது. வட கொரியா அணு ஆயுதங்களை அடிக்கடி சோதனை நடத்தி வருவதால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் ஏற்படுகிறது. இதை கண்டிக்கும் வகையில், வட கொரியாவுக்கு எதிரான பிரசுரங்கள் அடங்கிய பலூன்களை தென் கொரிய தன்னார்வலர்கள் கடந்த மாதம் வட கொரியாவுக்குள் அனுப்பினர். அதன் எதிரொலியாக வட கொரியா குப்பைகள்,பிளாஸ்டிக் கழிவுகள் ஆகியவற்றை பைகளில் போட்டு ராட்சத பலூன்களில் தென் கொரியாவுக்கு அனுப்பியது. ஒரு சில நாட்களில் மட்டும் ஆயிரக்கணக்கான பலூன்களை வட கொரியா வீசியது.
Advertisement

இந்நிலையில் தென் கொரிய தேசிய பாதுகாப்பு இயக்குனர் தலைமையில் உயர் அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இதில்,வட கொரியாவுக்கு எதிராக எல்லையில் ஒலி பெருக்கி பிரசாரத்தை மீண்டும் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இரு நாட்டு எல்லையில் வடகொரியாவை நோக்கி ராட்சத ஒலி பெருக்கிகளை வைத்து அதில் அந்த நாட்டுக்கு எதிராக பிரசாரம் செய்ய தென் கொரியா திட்டமிட்டுள்ளது. இது போன்ற செயல்களுக்கு எதிராக வட கொரியா நேரடி ராணுவ தாக்குதல் நடத்தக்கூடும் என்றும் இதனால் வீரர்களை தயார் நிலையில் வைத்திருக்குமாறு தென் கொரிய ராணுவ கமாண்டர்களுக்கு அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

Advertisement

Related News